ஏ.கே 47. துப்பாக்கி குண்டுகள் தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து வந்ததா?

மேற்கு தாம்பரம் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கி குண்டு மழை, இரண்டு நாட்களில் வழக்கறிஞர் வீடு உள்ளிட்ட பகுதியில் 6 ஏ.கே 47 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கு தாம்பரம் மீனம்பாள் தெருவில் உள்ள வழகறிஞர் தியாகராஜன் வீட்டில் முதல் தளத்தில் ஜன்னலை துளைத்த துப்பாக்கி குண்டு ஒன்று அறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ண்டாடிதை உடைத்த நிலையில் அறையில் விழுந்தது. இந்த தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் […]
தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம், வார்டு-66க்குட்பட்ட ராஜாஜி சாலை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக நியாயவிலை கடை கட்டடம் அமைக்கும் பணிக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் மேயர் வசந்தகுமாரி கமகைண்ணன், மண்டலக்குழு தலைவர்கள் சு.இந்திரன், து.காமராஜ், ச.ஜெயபிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
தேசிய போட்டியில் வென்ற இரட்டையர்களுக்கு தாம்பரத்தில் வரவேற்பு

தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இரட்டையர்களுக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் வரவேற்பு சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசியஅளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெற்ற இரட்டையர்களான எஸ்.பி.ரஞ்சன், எஸ்.பி.ரீகன் ஆகியோரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் வரவேற்ப அளிக்கப்பட்டது. பூச்செண்டுகளை கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதி மாறன் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் […]
பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள திருவுருவ படத்திற்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பின்பு சண்முகம் சாலையில் இருந்து அமைதி பேரணியாக சென்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தாம்பரம் அருகே அரசு பள்ளி மாணவி பெற்றோருக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ,நேதாஜி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் தனியார் உணவகத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா சேலையூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் மகள் சௌமியா (17) அரசு மகளிர் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல் நலம் பாதிக்கபட்டு இருந்த சௌமியா பள்ளிக்கு செல்லாததால் பெற்றோரிடம் ஆசிரியர் கண்டித்ததால் வீட்டிற்க்கு […]
தாம்பரம் அருகே காதல் தகராறில் வாலிபர் கொலை

தாம்பரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை தடுக்க வந்த நாயையும் வெட்டி கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் பீர்க்கண்காரணை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெருங்களத்தூர் குண்டு மேடு என்னும் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குண்டுமேடு அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக பீர்க்கன்காரணை போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் கொலை நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]
கௌரிவாக்கம் குளம் ரூ 64 லட்சத்தில் சீரமைப்பு

தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் 64 லட்சத்தில் குளம் சீரமைப்பு பணியை எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்தார். மண்டலகுழு தலைவர்கள் ஜெயபீரதிப் சந்திரன், இந்திரன் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்தநாள் என்பதால் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலத்திற்குட்பட்ட கெளரிவாக்கம் குளக்கரை குளம் கரைகள் இல்லாமல் முழுவதும் சிதிலமடைந்து கழிவுநீர் குட்டையாக காட்சியளித்தது. இதனையடுத்து 3 மண்டலம் சார்பில் அம்ருத் திட்டம் 64 கோடியில் ஆழப்படுத்தி, கரைகள் பலப்படுத்தி 215 மீட்டர் நடைபாதைகளுடன் சீரமைக்க முடிவு […]
தாம்பரம் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் திரை

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் மின்னணு சுவர்திரை, அரசின் திட்டங்களை அறிந்துகொள்ள அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இயக்கி வைத்தனர். தாம்பரம் மாநகராட்சி ஜி.எஸ்.டி சாலை பேரூந்து நிலையத்தில் செய்தி-மக்கள் தொடர்த் துறை அரசின் செய்திகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்கள் அறிந்திடும் வகையில்புதிய மின்னணு சுவர்திரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இயக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற […]
தாம்பரம் அருகே இலவச மருத்துவமனை திறப்பு

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெருங்களத்தூர்-பீர்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம், கேளம்பாக்கம் செட்டி நாடு மருத்துவமனை மற்றும் சாய் ஆக்ஸ்ரா டிரெஸ்ட் இணைந்து, அனைத்து வித மருத்துவர்களை கொண்டு மாபெரும் பொது இலவச மருத்துவமனையை ஓய்வு பெற்ற நீதிஅரசர். வள்ளிநாயகம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த இலவச மருத்துவமனையில் கண்,நெஞ்சகம்,பொது அறுவை சிகிச்சை,பொது மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் போன்றவற்றை இன்று முதல் , தினமும் காலை முதல் மாலை […]
தாம்பரத்தில் ஸ்டாலினுக்கு திமுக பிரம்மாண்ட வரவேற்பு

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட பேரூந்து முனையம் அமைக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.எஸ்.டி சாலை வழியாக சென்றார். தாம்பரத்தில் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் தண்டே மேளம் முழங்க கருப்பு சிவப்பு பலுன்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மண்டலகுழு தலைதலைவர்கள் காமராஜ், இந்திரன், ஜெயபிரதீப் சந்திரன், ஊராட்சிமன்ற தலைவர்கள் ஜனனிசுரேஷ், வேல்முருகன், கவுன்சிலர்கள் ஜெகன், சுரேஷ், உள்ளிட்டவர்களும் முதலமைச்சருக்கு பூங்கொத்து, சால்வைகள், புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். […]