திருத்தணியில் சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம்!

கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வடமாநில இளைஞர் சுராஜ், முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸில் அவருடன் செல்லாமல் போலீஸார் அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி இந்தியா முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. இதனை போலீசார் கண்டித்து உள்ளனர். வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசும் உறுதி செய்துள்ளது.

திருச்செந்தூர் கோவிலுக்குள் ஓட்டு கேட்ட விஜய் ரசிகர்கள்

திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் “தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், “அடுத்த வருடம் அறநிலையத் துறையைடேக்-ஓவர் செய்து, பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை’’ எனக்கூறி விஜய்யின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

முஸ்லிம் பெண்ணை காதலித்து மணக்கும் பிரியங்கா மகன்

முன்​னாள் பிரதமர் ராஜிவ் காந்​தி​யின் மகள் பிரி​யங்கா – ராபர்ட் வதேரா தம்​ப​திக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்​ளை​கள் உள்​ளனர். இந்​நிலை​யில், ரெஹான் தன்​னுடன் பள்​ளி​யில் பயின்ற வகுப்​புத் தோழி முஸ்​லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்​டு​களாக காதலித்து வந்​த​தாக தெரி​கிறது. அவி​வா​வின் தந்தை இம்​ரான் தொழில​திபர், தாய் நந்​திதா பெய்க் பிரபல டிசைன​ராக பணிபுரி​கிறார்.பிரியங்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறுகிறது.

சபரிமலை மகர ஜோதிக்கு 35,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மகர ஜோதி அன்று 35,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

காங்கிரஸ் மேலிடத்திற்கு பா சிதம்பரம் கண்டிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் பா சிதம்பரம் கூறியதாவது:-தமிழ்நாட்டில் நிச்சயமாக திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம். மற்ற மாநிலங்களை பற்றி கவலைப்படுங்கள். வீணாக தமிழகத்தில் டெல்லி தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என,நான் காங்கிரஸ் தலைவரிடம் கூறிவிட்டேன் என்றார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் சிவன் பார்த்துக் கொள்வார். மத்திய அமைச்சர் பேட்டி

திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இவ்வாறு அவர் கூறினார்

பான் கார்டு – ஆதார் இணைப்பு இன்றே கடைசி நாள்

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்து உள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டும். இணைக்கத் தவறினால் PAN எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் என வருமான வரித் துறை எச்சரிக்கை.எடுத்துள்ளது.

திமுக கூட்டணியில் மோதல்.வி.சி.க. கம்யூனிஸ்டுமீது காங்கிரஸ் பாய்ச்சல்

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரின் பதிவு வருமாறு:- “VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றிய செய்தி படித்தேன், இதுஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை […]

தமிழக சட்டசபை ஜனவரி 20 இல் கூடுகிறது

சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]

விளையாட்டு வீராங்கனை பி.வி சிந்துவுக்கு புதிய பதவி

உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் (பிடபிள்​யூஎப்) சார்பில் செயல்​படும் விளை​யாட்டு வீரர்​கள் ஆணை​யத்​தின் தலை​வ​ராக இந்​திய பாட்​மிண்​டன் வீராங்​கனை பி.வி.சிந்து தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்​தப் பதவியை வகிப்​பார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.