அதிமுக – பாமக கூட்டணி உறுதி! எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்பொழுது பாமகவும் கூட்டணியில் இணைந்து உள்ளது. இது இயற்கையாக அமைந்துள்ள கூட்டணி. மேலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்து விட்டோம். இதற்கான அறிவிப்பை பின்னர் அறிவிக்கிறோம் என்று கூறினார். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பத்தின்படி இந்த கூட்டணியை அமைத்து உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் […]
அதிமுக ஆட்சியமைக்கும்: அன்புமணி.
வரும் பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த விரும்பிய (அதிமுக – பாஜக) கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். வலுவான கூட்டணி. எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம். காரணம் சமீபத்தில் கூட நடைப்பயணம் மேற்கொண்டபோது திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் […]
ஆட்சியில் பங்கு கேட்க உறுதியாக இருக்கிறோம். – கே.எஸ் அழகிரி
திருவாரூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது: ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது. இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட்களும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. : அன்பு மணி பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம்
சென்னை:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அதிமுக – பாமக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள […]
சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதுவரை சுமார் 6.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உற்சவ நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாகவே அதிகரித்து வருகிறது. சபரிமலை வழித்தடங்களில் இதுவரை இல்லாத கூட்டம் நேற்று இருந்தது.எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை, பம்பை, கணபதி கோயில், மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, பெரிய நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் […]
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டாலும் தொடரும் பிரச்சினைகள்
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை ஜனவரி 7-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைக்கிறார். ராதா நகர் சுரங்கப்பாதை 17 ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் நீடிக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், என்று குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ரயில் நிலையத்திற்கு கிழக்கே 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ராதா நகர் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். […]
பொங்கலுக்கு 22,797 சிறப்பு பஸ்கள் பேருந்துகளை இயக்க முடிவு
பொங்கலை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக 22 797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .வரும் ஒன்பதாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த பஸ்ஸில் இயக்கப்படும். இதற்காக கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பகுதிகளில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய மகாபலிபுரம் சாலை, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளி சுற்றுச்சாலையை தேர்வு செய்து பயன்படுத்துமாறு அமைச்சர் […]
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் திமுக ஆட்சிக்கு பின்னடைவு
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சரியானது. அறநிலைத்துறை கோவில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் அந்த தீபத்தூண் கோவில் எல்லைக்குள் தான் உள்ளது என்று அதிரடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது என நீதிபதிகள் […]
பட்டியல் இன தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு – எடப்பாடி வாக்குறுதி
தமிழகத்தில் வீடு இல்லாதவருக்கு வீடு கட்டி கொடுக்க பசுமை வீடுகள் திட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ,பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஆகிய வீடுகள் உள்ளன.இந்த நிலையில் எடப்பாடி பேசுகையில் “திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்” என்று கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
நாளை மாற்றப்பட இருந்த பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் தள்ளிவைப்பு
“பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள பதிவில், நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.பிராட்வே பஸ் நிலையம் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.