2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு: வீட்டு வாசலுக்கு வரும் 33 கேள்விகள்!
2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது. குடிமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் 33 கேள்விகளை கேட்கவுள்ளனர். குடிமக்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையாளா், அதன் பயன்பாடு, வீட்டின் தரை மற்றும் சுவா் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வீட்டின் தலைமையாளரின் பாலினம், கட்டடத்தின் எண், மக்கள்தொகை வீட்டு எண், வீட்டின் உரிமையாளா் பட்டியலின அல்லது பழங்குடியின அல்லது பிற சமூகத்தைச் சோ்ந்தவரா என்பதை கேட்டறிவார்கள். சமையலறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு, வீட்டின் […]
நிலைமை மோசமாகும் முன் உடனடியாக கைவிட பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவசரமான மற்றும் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என சாடியுள்ளார். நீட் தேர்வு எனும் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் […]
குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்
குரோஷியா நாட்டின் தலைநகர் சாகிரேப்பில் இந்திய தூதரகம் உள்ளது. அதன்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இந்திய தேசிய கொடியை அகற்றியுள்ளனர். மேலும், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குரோஷியாவில் இந்திய தூதகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்; வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல். தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்வர் ஸ்டாலின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது. எந்த […]
சூரியன் மறைந்து விட்டது: அண்ணாமலை பேச்சு
மதுராந்தகம் தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “கொளுத்திக் கொண்டிருந்த சூரியன் மறைந்துவிட்டது. இது மாற்றத்திற்கான கூட்டம், மழை பெய்கிறது, மழையால் தாமரை, இலை மலரும்.”என்று அவர் கூறினார்.
இளைஞர்களை போதைப்பெருள் கும்பலிடம் ஒப்படைத்த திமுக.. ஸ்டாலின் மீது பிரதமர் மோடி கடும் ‛தாக்கு’
நாம் தமிழகத்தை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். நாம் தமிழகத்தை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம். நான் வெளிப்படையாகப் பார்க்கிறேன், திமுக அரசின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது திமுக ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அபாயமானதாக உள்ளது. இங்கே இருக்கும் திமுக அரசாங்கம் நமது இளைஞர்களை போதைப்பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்து விட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. தாய் தந்தைகளின் கண்முன்னே குழந்தைகள் சீரழிகிறார்கள். போதைப்பொருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் […]
திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது! பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செங்கல்பட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு முதல்வர் எழுப்பிய கேள்விகள் – அண்ணாமலை காட்டமான பதில்
பாஜக அண்ணாமலை பதிவு: “திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, சமக்ர சிக்ஷா திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி […]
வளர்ப்பு நாய்க்கு துலாபாரம் கொடுத்த தெலுங்கு நடிகை!
தனது வளர்ப்பு நாய்க்குத் ‘துலாபாரம்’ (வெல்லம்/தங்கம்) வழங்கிய விவகாரம் தொடர்பாக, தெலுங்கு நடிகை டீனா ஸ்ராவ்யா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். தனது நாய் உடல்நலக் குறைவிலிருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக வேண்டியிருந்ததாகவும், அந்த பக்தியினால் தான் அவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தையோ அல்லது சடங்குகளையோ கொச்சைப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், இந்தச் செயலால் பக்தர்கள் யாராவது மனவேதனை அடைந்திருந்தால் மன்னிக்கும்படியும் அவர் ஒரு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.