இந்திய கிரிக்கெட் அணியை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

இந்தூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி மூலம் கோலி 35 மைதானங்களில் தன் ஒரு நாள் சதங்களை எடுத்துள்ளார். இதில் இந்தூர் சதம் கடைசியாக சேர்ந்தது. இதிலும் சச்சின் டெண்டுல்கரை கடந்து விட்டார் கோலி. சச்சின் 34 மைதானங்களில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

அஜித் குமார் உடன் கார் பந்தயத்தில் செல்ல கட்டணம்

துபாயில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோடிரோமில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது அஜித்குமார் ஓட்டும் காரில் அவருடன் செல்வதற்கு 86 ஆயிரத்து 475 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை கட்டி காரில் அவருடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.

உலக கோப்பை கால்பந்து நடுவர்களாக மூன்று இந்தியர்கள் தேர்வு

உலக கால்​பந்து சம்​மேளன (பி​பா) நடு​வர்​களாக இந்தி​யா​வைச் சேர்ந்த 3 பேர் தேர்​வாகி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அகில இந்​திய கால்​பந்து சம்​மேளனம் வெளியிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: குஜ​ராத்தை சேர்ந்த ரச்​சனா கமானி, புதுச்​சேரியைச் சேர்ந்த அஸ்​வின் குமார், டெல்​லியைச் சேர்ந்த ஆதித்யா புர்​கயஸ்தா ஆகியோர் பிபா நடுவர்​களாக தேர்​வாகி​யுள்​ளனர். அது​மட்​டுமல்​லாமல் முரளிதரன் பாண்​டுரங்​கன்​(புதுச்​சேரி), பீட்டர் கிறிஸ்​டோபர் (மகா​ராஷ்டி​ரா) ஆகியோர் பிபா உதவி நடுவர்​களாகத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அந்​தச் செய்திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.இந்த ஆண்டின் முக்கிய நிகழ்ச்சியாக உலக கோப்பை […]

விளையாட்டு வீராங்கனை பி.வி சிந்துவுக்கு புதிய பதவி

உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் (பிடபிள்​யூஎப்) சார்பில் செயல்​படும் விளை​யாட்டு வீரர்​கள் ஆணை​யத்​தின் தலை​வ​ராக இந்​திய பாட்​மிண்​டன் வீராங்​கனை பி.வி.சிந்து தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்​தப் பதவியை வகிப்​பார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

விராட் கோலி புதிய சாதனை

15 ஆண்​டு​களுக்கு பிறகு பெங்களூரில் நடந்த விஜய் ஹசாரே போட்​டி​யில் களமிறங்​கிய விராட் கோலி ஆந்​திர அணிக்கு எதி​ராக 131 ரன்​கள் எடுத்​தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் அதிவேக​மாக 16 ஆயிரம் ரன்​களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்​தார். தனது 330-வது இன்​னிங்​ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்​துள்​ளார். இதற்கு முன்​னர் இந்​திய அணி​யின் முன்​னாள் வீரர் சச்​சின் டெண்​டுல்​கர் லிஸ்ட் ஏ கிரிக்​கெட்​டில் 391 இன்​னிங்​ஸ்​களில் 16 ஆயிரம் ரன்​களைக் கடந்​திருந்​ததே […]

இந்தியா வந்த மெஸ்ஸிக்கு கிடைத்த ரூ 89 கோடி

இந்தி​யா​வில் சுற்​றுப் ​பயணம் மேற்​கொண்ட அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யின் ஜாம்​ப​வான் லயோனல் மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்​கப்​பட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது. கடந்த 13-ம் தேதி கால்​பந்து ஜாம்​ப​வான் மெஸ்ஸி இந்​தி​யா​வுக்கு வருகை தந்​திருந்​தார். கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத், மும்​பை, டெல்லி ஆகிய நகரங்​களில் அவர் சிறப்பு நிகழ்ச்​சிகளில் கலந்து கொண்​டார்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு.

சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அக்‌ஷர் படேல் துணை கேப்டன். இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்; சுப்மன் கில்லுக்கு இடமில்லை. பிப்ரவரி 7ஆம் தேதி போட்டிகள் தொடக்கம்.

உலகக்கோப்பை கால்பந்து அணிக்கு ரூ.450 கோடி பரிசு

நடப்பு சாம்​பியன் அர்​ஜென்​டி​னா, பிரேசில், பிரான்​ஸ், ஸ்பெ​யின், ஜெர்​மனி உட்பட 48, அணி​கள் பங்​கேற்​கும் 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய 3 நாடு​களில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான பரிசுத்​தொகையை ஃபிபா அறி​வித்​துள்​ளது. இதன்​படி தொடருக்​கான மொத்த பரிசுத்​தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடி​யாகும். சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி ரூ.450 கோடியை பரி​சாக அள்​ளிச்செல்​லும். 2022-ம் […]

ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள்!

2026ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெற்றது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள்… 1) முதலிடத்தில் இருப்பவர் கேமரூன் கிரீன். அவரை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 2) இரண்டாமிடத்தில் மதீஷா பதிரானா உள்ளார். அவரையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியே அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ. 18 கோடிக்கு பதிரானா ஏலத்தில் வாங்கப்பட்டார். 3, 4) மூன்றாம், நான்காம் இடங்களில் இளம் வீரர்களான கார்த்திக் சர்மாவும் […]