ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஏக தின லச்சார்ச்சனை விழா

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தை மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம குழுவினரனால் ஏக தின லச்சார்ச்சனை விமர்சையாக நடைபெற்றது காலையில் கருமாரி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்று சிறப்பு தீபாரனை செய்யப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர் விழாவுக்கான ஏற்பாடுகளை லலிதா சகஸ்ர நாம குழுவினர் மற்றும் கருமாரியம்மன்ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் […]

பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஐயப்ப சுவாமி 51 ஆம் ஆண்டு மலர் பூஜை

குரோம்பேட்டை பத்மநாபன் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 51 ஆம் ஆண்டு மலர் பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மகா கணபதி ஹோமம், 51 வகை சிறப்பு அபிஷேகம்,சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று மதியம் ஒரு மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. அன்னதான உபயதாரர் சங்கர் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர்கள் நித்யா சங்கரநாராயணன் மற்றும் சங்கரநாராயணன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினர். […]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (அக். 4) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (அக். 2) கோயிலில் கொடிக்கம்பத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை ஏற்றுவதற்கான புனித தர்ப்பை மற்றும் புனித கொடியேற்றும் கயிறு போன்றவற்றை தேவஸ்தான ஊழியர்கள் மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று கோயில் அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். இவை பாதுகாப்பாக ரங்கநாயக மண்டபத்தில் பெரியசேஷ வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவை யொட்டி, திருப்பதி […]

காலையில் விழிக்கும் போது முதலில் எதைப் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

நாம் காலை எழுந்தவுடன் உங்கள் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். அல்லது செல்வமகளான மகாலட்சுமியின் புகைப்படத்தை பார்த்தால் அன்றைய நாள் மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குறிப்பாக அந்த நாள் மங்களகரமான நாளாக இருக்குமாம்.காலை கண் விழித்ததும் முதன் முதலில் சூரியனை தரிசிப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.மேலும் தாமரை பூ, சந்தனம், கடல், மலர்கள், அழகான இயற்கை காட்சிகளை பார்ப்பதன் மூலம் அன்றைய நாள் மிகவும் சிறப்பான நல்லாக இருக்கும். குறிப்பாக அன்றைய நாள் முழுவதும் […]

நவராத்திரி உணவு வகைகள்:

முதல் நாள்: வெண் பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை போன்ற உணவுகளை படைப்பார்கள்.இரண்டாம் நாள்: புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம் போன்ற உணவுகளை படைப்பார்கள்.மூன்றாம் நாள்: கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.நான்காம் நாள்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல் போன்ற உணவுகளை படைத்து […]

மகாளய அமாவாசை

மகாளயம் என்றால் ஒன்றாக கூடுவது என்று பொருள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கே மகாளய அமாவாசை என்னும் சிறப்பு உள்ளது.மகாளய பட்ச நாட்களில் முன்னோர்கள் ஒன்று சேர்ந்து பூமியில் தோன்றி நம் இல்லத்தில் நம் அருகிலேயே இருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பதாக ஐதீகம் உள்ளது.இந்துக்களுக்கு அவர்களின் குலதெய்வங்களும், பெருந்தெய்வங்களும் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முன்னோர்களை வழிபடுவது, அவரவர்களின் சந்ததியினர்களின் மேன்மைக்கான வழியாகவும், செல்வம் கொழிக்கும் வளமையைக் கொடுக்க […]

நவராத்திரி விரதம் ஏன் கொண்டாடப்படுகிறது: அதன் மகத்துவம் என்ன?

கல்வி, செல்வம், வீரம் என மூன்று சக்திகளை கொண்ட தேவியர்களை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் விரதம்.இது புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை தேவியைக் குறித்து நோற்கப்படும் விரதமாக கருதப்படுகின்றது.நவராத்திரி விரத அனுஷ்டிப்புகள்பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.அந்தவகையில் நவராத்திரி சிறப்பும், மகத்துவமும் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.நவராத்திரி என்றால் என்ன?நவராத்திரி […]