திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை முன்னிட்டு ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் […]
திருச்செந்தூர் கோவிலில் மூத்த தம்பதிகளுக்கு மரியாதை
தமிழக அரசு செய்திக்குறிப்பு: வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த, இந்து மதத்தைச் சார்ந்த ஆன்மீக ஈடுபாடுள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2000 தம்பதியருக்கு கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
கோயிலுக்குப் பிறகு புத்தகம் படிப்பேன் -ரஜினி அறிவிப்பு
கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசன் எழுதிய வேல் பாரி நாவலில் ஒரு லட்சம் பிரதிகள் விற்ற வெற்றி விழா கொண்டாட்ட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:- அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்பத்திக் கொள்ளுங்கள். வேள்பாரி திரை வடிவத்துக்கு அனைவரையும் போல நானும் காத்திருக்கிறேன். யாருக்காக அழுதான் புத்தகத்தில் ஜெயகாந்தனின் எழுத்து வியப்பை அளித்தது. ஜாவர் சீதாராமன், சிவசங்கரி, சாண்டில்யன், கல்கி ஆகியோர் நாவல்களை படித்துள்ளேன். புத்தகத்தை பற்றி பேச சிவக்குமார், கமல்ஹாசன் இருக்கின்றனர். என்னை ஏன் அழைத்தார்கள். […]
குமரியில் பெண்களை விதவிதமாக குளிக்க வைத்த மத போதகர் கைது…
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலக் குறைவுஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பெந்தெகொஸ்தே சபைக்கு சென்றிருக்கிறார். அங்கிருக்கும்போதகர் உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அவருடன் உறவு கொள்வதால் தான் உனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. தீர்க்கதரிசனம் பெற்ற என்னுடன் உறவு கொண்டால் நோய்கள் குணமாகும் எனக் கூறி, இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போதகரைக் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர் பெண்களை விதவிதமாக குளிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது
திருச்செந்தூர் கோவிலுக்கு 200 கோடி கொடுத்த சிவ நாடார் யார்?
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றதற்கு ஒரே ஒரு தனி நபர் கொடுத்த 200 கோடி நன்கொடை தான் காரணம்.அவ்வாறு நன்கொடை கொடுத்தவர் பெயர் சிவ நாடார். இவர் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள எச்.சி.எல் நிறுவனத்தின் அதிபர் அதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் அருகே உள்ள மூலப் பொழியை சேர்ந்தவர். இவரது தாயார் வாம சுந்தரி பெயரில் தான் நன்கொடை தரப்பட்டது..இவர் சி.பா. ஆதித்தனாரின் சொந்த சகோதரி ஆவார்.
திருச்செந்தூர் ராஜகோபுரத்திற்கு தங்க குடத்தால் அபிஷேகம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 6 மணி அளவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது மச்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ராஜகோபுரம் கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். இதில் ராஜகோபுரத்துக்கு மட்டும் தங்க குடத்தில் புனித நீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது […]
மொகரம் தினத்தில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தார் வாழ்ந்து வந்துள்ளார். இவர் இப்பகுதியில் நீர்நிலைகளை உருவாக்கி, விவசாய நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அவரது மறைவிற்கு பிறகு அவர் நினைவாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகை பூக்குழி திருவிழா 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா கடந்த ஜூன் 27-ந் தேதி துவங்கியது. தொடர்ந்து 7ஆம் நாள் மற்றும் 11ஆம் நாளில், மேலக்கடலாடியில் உள்ள அவரது நினைவிட அத்தி மரத்திலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஊர்வலமாகக் […]
குடமுழுக்கு விழா:திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
வருகிற ஜூலை ஏழாம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவையொட்டி திருச்செந்தூரில்.பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.திருப்பதியை மிஞ்சும் பிரமாண்டத்துடன் முருகன் கோவில் ஜொலிக்கிறது பழமையை மீட்டெடுத்துநவீன வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறதுஎச்.சி.எல் அதிபர் சிவநாடார். அளித்த 200 கோடி நன்கொடையாலும் அரசு மற்றும் அறநிலைய துறை சார்பிலும் சுமார் 200 கோடி செலவு செய்து இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கி உள்ளனர்புதியகலையரங்கம்,அன்னதான கூடம் , நாழிக்கிணறு பாதை, ஏராளமான விடுதிகள் மட்டுமல்லாமல் பக்தர்கள் ஆங்காங்கே இளைப்பாற ஏராளமான படிக்கட்டுகள் என […]
சபரிமலையில் வரும் 11-ம் தேதி நடை திறப்பு..!
சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கு முன்பாக வரும் ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மாளிகைபுரம் கோயிலின் இடதுபுறத்தில் இருக்கும் நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் மாற்ற தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வேறு இடத்தில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால் கோயில் நடை 11-ம் தேதி திறக்கப்படுகிறது. 12-ம் தேதி நவக்கிரக பிரதிஷ்டை செய்யப்பட்டு 13-ம் தேதி கோயில் நடை அடைக்கப்படுகிறது.
லட்டு டோக்கன் பெற QR கோடு முறை – திருமலை தேவஸ்தானம்.*
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் லட்டு வாங்க இனி வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். பிரத்யேக எந்திரத்தில் QR கோடினை ஸ்கேன் செய்து விரைவாக பணம் செலுத்தி லட்டு பெறும் வசதி அறிமுகம். டச் ஸ்கீரினுடன் கூடிய பிரத்யேக எந்திரத்தில், தரிசன டிக்கெட் எண், எத்தனை லட்டு தேவை, மொபைல் எண்ணை உள்ளீடாக வழங்க வேண்டும். திரையில் தோன்றும் QR கோடினை ஸ்கேன் செய்து, நாம் லட்டுக்கான பணத்தை UPI (அ) பிற டிஜிட்டல் முறை மூலம் […]