திருச்செந்தூர் கடலில் குளிக்க கட்டுப்பாடு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடற்கரையில் பக்தர்கள் குளிப்பது வழக்கம். தற்போது அந்த கடற்கரை பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாறைகள் வெளியே தெரிகின்றன. எனவே பக்தர்கள் நீண்ட நேரம் குளிக்க கூடாது. வயதானவர்கள் தனியாக குளிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு கட்டை கட்டி வைத்துள்ளனர்
திருப்பரங்குன்றம் தீபத்தூண்- அரசு உறுதி
திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று வாதாடும்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை 1920 இல் நடந்த ஆய்விலும் இந்த தூண் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளது
சிட்லபாக்கம் பெருமாள் கோவிலில் குடமுழக்கு விழா
சென்னை அடுத்த சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது சிட்லப்பாக்கம் ஜோதிநகரில் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் கோவில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாஹீதி நடைபெற்று புனித கலசநீரை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரகலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது, […]
திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம்!
திருப்பரங்குன்றம் வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞரை வெளியேற்றவும், பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இதில் எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 59 ஆகும். இந்த வழிப்பாதையில் சராசரியாக தினசரி 1,500 முதல் 2,500 வரை பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேநேரத்தில் வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக இதுவரை 64 ஆயிரத்து 776 பக்தர்கள் […]
மதுரை புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்:
மதுரை மேலமடை சந்திப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நாளை (07.12.2025) திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.
‘ தாம்பரம் யு டியூபர்’ வாராகிக்கு குண்டாஸ்
‘யு டியூபர்’ வாராகி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம் பரத்தை சேர்ந்தவர் வாராகி என்ற கிருஷ் ணகுமார், 51; யு டி யூபர். இவர் மீது, மிரட்டி பணம் பறிப்பது உட்பட 30க்கும் மேற் பட்ட வழக் குகள் உள்ளன. கிருஷ்ணகுமார் சில தினங்களுக்கு முன், பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லையில், வாட கைக்கு சென்று வீட் டின் உரிமையாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டார். தற்போது, சென்னை மாநகர போலீசாரால், குண்டர் […]
பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம்
கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து 9 நாட்கள் வரை, அதாவது நவம்பர் மாதம் 25-ம் தேதி வரை பத்மாவதி தாயார் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறுவாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையொட்டி, நேற்று வைகானச ஆகம விதிகளின்படி, கோயில் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 17ஆம் தேதி ஆரம்பம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 17ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கோயிலுக்கு வர சுவாமி தரிசனம் பெற ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். இந்த முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தற்போது முன்பதிவு செயலியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசன தேதி மற்றும் நேரத் தேர்வு, காலநிலை தகவல், அவசர உதவி, மருத்துவ சேவை உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த புதிய […]
குலசை தசரா விழா ஆபாச நடனங்களை தடுக்க நடவடிக்கை
குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களைத் தடுக்க வட்டாட்சியர் தலைமையில் தனி குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூரை. சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . தசரா குழுவினர் தங்கள் குழுவுக்கு அதிக வருமானம் பெற சின்னத்திரை நடிகர் நடிகைகளை அழைத்து வந்து ஆபாச நடனம் ஆடுவதாக புகார் வந்ததன் பேரில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது