ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் தெரு, வியாசர் தெரு, சர்வமங்களா நகர் 4வது தெரு, கருணாநிதி தெரு ஆகிய தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் தனது சொந்த முயற்சியில் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு சாலையில் உள்ள மழைத்தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக கால்வாய் ஏற்படுத்திய காட்சி.
சிட்லபாக்கதில் மாடு முட்டி மூதாட்டி காயம்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி ஜோதி (70) இன்று காலை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அதே தெருவில் கூட்டமக இருந்த மாடுகள் ஒன்றை ஒன்று இடித்தவாறு ஓடினயபோதுமூதாட்டி ஜோதியின் மீது மூதாட்டி மீது மோதிசென்றது. இதனால் மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காளை மாடுகளை விரட்டி விட்டு பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே […]
ரோலர் ஸ்கேட்டிங்: ஆசிய சாதனை படைத்த சிட்லபாக்கம் மாணவிக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட மூன்றாவது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கம் 43-வது வார்டுக்கு உட்பட்ட துரைசாமி நகரில் உள்ள சாகச நாயகி செல்வி.கார்த்திகா ஜெகதீஸ்வரன் ஆசியா கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு அதிலும் சிட்லபாக்கத்திற்கு பெருமை சேர்த்த சாகச நாயகிக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர் ராஜா அவர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மண்டல குழு தலைவர் […]
நகர்ப்புற சாலை 2 கோடி 11 லட்சத்தில் திட்டத்தின் கீழ்3 வது மண்டலத்தில் உள்ள சிட்லபாக்கத்தில் 36 ரோடு தார் சாலை புனரமைப்பு பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார்

தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சிட்லபாக்கம் 43வது வார்டு ராகவேந்திரா சாலையில் தார் சாலை புனரமைப்பு பணியை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துகொண்டு சாலை பணியினை துவக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். மேலும் ஒப்பந்ததாரர்களை மழை காலத்திற்கு முன்பாக சாலை பணிகளை தரமாகவும் மாநகராட்சி வழிகாட்டுதலின் படி சரியான அளவீடுடனும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் செம்பாக்கம் […]
ஏரியை காப்போம்

தாம்பரம் மாநகரம், சிட்லபாக்கத்தில், (02/10/2023) காலை, Save Lakes (ஏரியை காப்போம்) சார்பில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற விழிப்புணர்வு நடைபயணத்தை, தாம்பரம் மாநகர செயலாளர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R..ராஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், Chitlapakkam Rising நிர்வாகிகள், இ.மனோகரன், சி.சுரேஷ், இரா.விஜயகுமார், மலர்.மு.கருணா, சி.ஜெகன், இ.வி.சுரேஷ், மு.பாரதிதாசன், செம்பாக்கம் கோகுல், பா.பிரதாப், R.K.புரம் சிவா, ச.ஜெகனாதன், துரை.இரா.சிவகுமார், சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43-வது வார்டில் மக்கள் குறை தீர்ப்பு

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43வது வார்டில் உள்ள பாலாஜி அவென்யூ, சாந்தி அவென்யூ, பாலு அவென்யூ, கனகராஜ் அவென்யூ மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறைகளை, தெரிந்துகொள்ள மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் MC தலைமையில், சுகாதாரப்பிரிவு அதிகாரி திரு.நாகராஜ்(SO), கண்காணிப்பாளர் திரு.கார்மேகம்(SS), வருவாய்ப்பிரிவு ஆய்வாளர் திரு.பிரபாகரன்(RI), திரு.ரவிச்சந்திரன்(BC) மற்றும் பொறியாளர் பிரிவு திருமதி.ஜீவித்ரா(TA) மற்றும் அங்குள்ள பொதுமக்கள்கள் கலந்து கொண்டு மாநகராட்சியின் மூலம் எடுக்கப்படவேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் குறைகளும் அதற்குண்டான பொருட்கள் […]
தாம்பரம் வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன் ராஜ் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் மோகன்ராஜ் மணிமங்கலம் அடுத்த ஆதனூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளார், இன்று காலை மோகன்ராஜை சில மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டதாக அவரது தங்கையின் செல்போனுக்கு தொடப்பு கொண்ட நபர் ஒருவர் கூறியதை அடுத்து பதறி போனவர் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்தத போது தலை […]
மாணவர்களை ஈடுபடுத்துவதே ‘நிகர பூஜ்ஜிய உமிழ்வு நாடு’ என்பதை அடைவதற்கான சிறந்த வழி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிரீன் டெர்ரே அறக்கட்டளையுடன் இணைந்து கார்பன் நடுநிலைமைக்கான நடவடிக்கைகளுக்கான வரைபடத்தை வரைவதற்காக U75: Net Zero University Campus Regional Workshop ஐ நடத்தியது. கார்பன்-நியூட்ரல் வளாகங்களை உருவாக்க தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் உயர் கல்வி நிறுவனங்களை சித்தப்படுத்துவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை […]
எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் ஆருஷ் 23-தேசிய அளவிலான 4 நாள் தொழில்நுட்ப திருவிழா-90,000 மாணவர்கள் பங்கேற்பு

நிறைவு விழாவில் நாட்டின் முன்னணி உணவு விஞ்ஞானி கே. ராஜகோபால் ‘பிரதிபலித்தல்’ என்ற ஆண்டு இதழை வெளியிட்டார் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST) சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற, தேசிய அளவிலான கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST SRM Insititute of […]
சுவர் இடிந்து விழுந்து பல்லாவரத்தில் பெண் பலி.

ஜமீன் பல்லாவரம் பாரதி நகரை சேர்ந்தவர் சத்தியவாணி (55) வீட்டு வேலை செய்து வந்தார் இவருடைய கணவர் கண்ணியப்பன் கூலி வேலை செய்து வருகிறார், நேற்று இரவு சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் குளிச்சியான சூழல் நிலவியது இதனால் சத்தியவாணி கீழ் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக கூறிவிட்டு மொட்ட மாடியில் தூங்குவதற்கு சென்றுள்ளார், இன்று அதிகாலை அருகே சரவணன் என்பவரின் வீட்டின் சுற்று சுவர் சத்தியவாணி தூங்கி கொண்டிருந்த வீட்டின் சுற்று சுவர் மீது […]