சிட்லபாக்கம் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடம்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏதுவாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்

இதனை தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் கேள்வி எழுப்பினார்.. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா இதனை பரிசீலித்து, பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, அமைச்சர் கே.என்.நேரு ஒப்புதலோடு,.எஸ்.ஆர்.ராஜா எம்.எல் ஏ வழிகாட்டுதலின் படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளுக்கு பாலாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் இது விநியோகிக்கப் படுகின்றது. பாலாற்றுத் தண்ணீர் […]
போதை பொருளுக்கு எதிராக சிட்லபாக்கத்தில் அதிமுக மனித சங்கிலி

இளைஞர்களை பாதிக்கும் போதைப் பொருள்கள் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போதை பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்படும் நிலையில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. போதை பொருட்களை திமுக அரசு தடுக்க வேண்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு […]
சிட்லபாக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பரிமளா சிட்டிபாபு, இ.மனோகரன், பா.பிரதாப், ஆர்.கே.புரம் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் லயன் சங்கம் சார்பாக தலைவர் புகழேந்தி தலைமையில் 324L மாவட்டம் முன்னாள் உடனடி ஆளுநர் சி.ஜெகன் ஏற்பாட்டில்

பரிமளா சிட்டிபாபு, பா.பிரதாப், சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிட்லபாக்கம் கலைவாணர் பூங்கா மற்றும் கோவிலுக்கு சொந்தமான காலி இடம் மேலும் முக்கிய தெரு ஓரங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை சுற்றி இரும்பு கம்பிகளிலான வேலிகளை உடனடியாக வைத்து பாதுகாப்புடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிட்லபாக்கத்தில் வேகத்தடையில் வாகன மோதி தொழிலாளி பலி

சிட்லபாக்கத்தில் வேகத்தடை காரணமாக இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார். முறையாக வேகத்தடை, எச்சரிக்கை கோடுகள் அமைக்க வில்லை என சாலை அமைத்த ஒப்பந்ததார், மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது, சிசிடிசி காட்சி உள்ளது. சேலம் மாவட்டம் தலவாசல் அடுத்த வீரனூர் பகுதியை பூர்விகமா கொண்ட கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (34), இவர் மனைவி சந்தோசம், இரண்டு மகன், ஒரு மகளுடன் சிட்லப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். […]
சிட்லபாக்கத்தில் கழிவறையில் கால் சிக்கியதால் தவித்த சிறுமி

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் 10 வயது சிறுமியின் கால் கழிவறையில் சிக்கியது. ஒரு மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர். சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், பாபு தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியினரின் 10 வயது சிறுமி இன்று காலை பள்ளி செல்வதற்காக கிளப்பியுள்ளார். முன்னதாக கழிவறைக்கு சென்ற சிறுமியின் வலது கால் கழிவறையில் மாட்டிக் கொண்டது சிறுமி கதறி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு கழிவறைக்கு சென்று பார்த்த […]
சிட்லபாக்கம் 43-வது வார்டு இராமலிங்க அடிகளார் தெருவில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் குப்பையும் கூடமாக புதர் மண்டியும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்தது

இந்த இடத்தை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி. ஜெகன் தனது சொந்த முயற்சியால் ஜேசிபி வாகனத்தை வைத்து சுத்தம் செய்தார் சுத்தம் செய்த பின் இந்த இடத்தை அங்குள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் விளையாட்டு மைதானமாகவும் மற்றும் பொழுதுபோக்காகவும் பயன்படுத்தி வந்தால் மீண்டும் இந்நிலைமை ஏற்பாடாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த இடத்தை சுத்தம் செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினரை அப்பகுதிவாள் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.
குப்பை மேடாக மாறும் சிட்லபாக்கம் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தின் மேல் பொதுமக்கள் அதிருப்தி

தாம்பரம் மாநகராட்சி சார்பில் குப்பை எடுப்பதற்கு தனியாக ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வீடுகளில் பொதுமக்கள் மரம் வளர்க்கின்றனர் ஆனால் மரத்தில் இருந்து வரும் மரக்கழிவுகளை எடுப்பதற்கு ஊழியர்கள்பணம் கேட்கின்றனர். வீட்டிற்கு வெளியே கொண்டு போய் மரக்கழிவுகளை வைத்தாலும் அபராதம் விதிப்போம் இல்லை என்றால் அதை எடுப்பதற்காக தனியாக பணம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.இதனால் பொதுமக்கள் இனிமேல் வீடுகளில் மரம் வளர்ப்பதை விட்டு விடுவார்கள் போல் தெரிகின்றது.இப்போது இலையுதிர் காலம் என்பதால் சாலைகளில் நிறைய மரங்களில் இருந்து விழும் இலைகள்காய்ந்து […]
சிட்லபாக்கத்தில் புதிய கால்நடை மருத்துவமனை உருவாகிறது

சிட்லபாக்கத்தில் 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை, தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அடிகல்நாட்டி பணிகளை துவக்கினார். சிட்லப்பாக்கத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டுவந்தது. இந்த நிலையில் அதே வளாகத்தில் புதியதாக 90 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டும் பணியை தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கினார். மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், கவுன்சிலர்கள் சுரேஷ், ஜெகன், கால்நடை மருத்துவ அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் […]
தாம்பரம் மாநராட்சி 34வது வார்டு சிட்லபாக்கம் பகுதி குமார் அவென்யூ அறிஞர் அண்ணா பூங்கா புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கம் சார்பில் பூங்காவை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி டீன் வி.ரேவதி, லயன்.விக்டோ பிளாக்கா, முன்னாள் கவுன்சிலர் பிரதாப் , 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் கலந்து கொண்டார்கள்.