சிட்லபாக்கத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3ல் தி.மு.க அரசின் நிர்வாகத்தை கண்டித்து சிட்லபாக்கம், -செம்பாக்கம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கம் அருகில் நடந்த போராட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இந்த ஆர்பாட்டதில் அதிமுக சிட்லபாக்கம்-, செம்பாக்கம் பகுதி செயலாளர் மோகன், அதிமுக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மாவட்டக் துணைச் செயலாளர் ப.தன்சிங், மாமன்ற உறுப்பினர்கள் சுபாஷினி புருஷோத்தமன், […]
சிட்லபாக்கம் 43வது வார்டு உட்பட்ட தெருக்களில் பல இடங்களில் மரங்கள் மின்கம்பங்களை உரசிக் கொண்டு இருக்கின்றன

மழை காலத்திற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை பணியாளர்களின் உதவியோடு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியின் போது எடுத்த படம்.
டென்மார்க் நாட்டில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் சிட்லபாக்கம் சி.ஜெகன் குப்பைகள் தரம் பிரிப்பது பற்றி நேரில் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சியில் தற்போது வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அதனை ஒழுங்கு படுத்துகிறார்கள். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், அதிக குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களை தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு வீட்டுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை வசூலித்து குப்பைகளை தரம் பிரித்து அள்ளிச் செல்கிறார்கள். இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் நாட்டில் உள்ள கென்டாப்ட் […]
சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம்

சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.சிட்லபாக்கம் 2வது பிரதான சாலைக்கு அருகே அமைந்துள்ள ஏரி நிலப்பரப்பில் விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில் “அடையா படையா” எனும் விளையாட்டுப் போட்டிக்கான இலவச கோடைகால சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் முகமை தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றி பால், முட்டை மற்றும் பழம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில-மாவட்ட அடையா படையா நிர்வாகிகள், ஆதரவாளர் உமாபதி & சன்ஸ் நிறுவன […]
சிட்லபாக்கம் திமுகவுன்சிலர் பிறந்தநாள் விழா

தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு திமுக கவுன்சிலரும், உமாபதி அன் சன்ஸ் நிறுவன தலைவருமான லயன்.சி.ஜெகன் பிறந்தநாள் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், திமுக நிர்வாகிகள், நலச்சங்கத்தினர், நண்பர்கள், உமாபதி அன் சன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைவரும் சி.ஜெகனுக்கு சால்வை அணிவித்தும், மலர் […]
சிட்லபாக்கம் புரோகிதர் வீட்டில் லாக்கருடன் 27 பவுன் கொள்ளை கால்டாக்சி டிரைவர் கைது

தாம்பரம் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லாக்கருடன் திருடி சென்ற சம்பவம் கொலை வழக்கு குற்றவாளி மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் இருவரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சென்னை சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் ரங்கராஜன் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்திபருடன் மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மூன்று […]
சிட்லபாக்கம் 43வது வார்டில் உள்ள சரஸ்வதி நகர் பாபு தெரு பூங்காவில் புதியதாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகின்றன

அவற்றின் தரத்தை மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுவர் உபகரணங்களை பதிக்கும் பணி தொடங்கிய போது எடுத்த படம்
சிட்லபாக்கத்தில் 50 பவுன் நகை கொள்ளை

சிட்லபாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை கொள்ளை சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் ரங்கராஜ் (வயது-67) அவரது மனைவி ஹேமலதா (வயது-63) இவர்களின் மகனான ஆதித்யா (வயது-38) இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது-30) இவர்களின் மகன் என ஐந்து பேரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரங்கராஜனின் தந்தையின் நூறாவது பிறந்த நாளை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் சென்றுள்ளனர். […]
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள். இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.எம்.டேனியல் 39வது வடக்கு வட்டக் செயலாளர் பா.வேதகிரி, வட்ட பொருளாளர் போர்வெல் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேர்தலை முன்னிட்டு கால்வாய் சீரமைப்பு

சிட்லபாக்கம் கக்கன் தெரு பகுதி திருப்பத்தில் பல மாதங்களாக மழை நீர் வடிகால் பகுதி சேதம் அடைந்து சாலையில் பாதி அளவுக்கு பள்ளம் விழுந்து இருந்தது. இது பற்றி ஜி.எஸ்.டி ரோடு நியுஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. தற்போது தேர்தல் வருவதையொட்டி அந்த பகுதியில் சிமெண்ட் தடுப்பு அமைத்து சரி செய்துள்ளனர். மேலும் அந்த வழியில் உள்ள சாலைகளில் குண்டு குழிகள் எல்லாம் சிமெண்ட் கலவையால் நிரப்பப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.