காஞ்சிபுரம்‌ மாவட்ட வெள்ளமிீட்பு பணிக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்‌ முத்துசாமியை டிரக்டரில்‌ அமரவைத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட வண்டலூர்‌-மிஞ்சூர் வெளிவட்ட சாலையில்‌ காங்கிரஸ்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ செல்வபெருந்தகை ஓட்டி சென்றார்‌.

மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]

தோழர் என்.சங்கரய்யா காலமானார் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) வயது உடல் நலக் குறைவின் காரணமாக நவம்பர் 15, 2023 காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது. இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10 மணியளவில், சி.பி.ஐ(எம்) […]

தோழர் சங்கரய்யாவின் மறைவு தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பு .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக, நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 3 […]

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் N. சங்கரய்யா காலமானார்.

1 தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி. 2.அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று… 3.படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்… 4 தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் […]

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43-வது வார்டில் மக்கள் குறை தீர்ப்பு

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 உட்பட்ட 43வது வார்டில் உள்ள பாலாஜி அவென்யூ, சாந்தி அவென்யூ, பாலு அவென்யூ, கனகராஜ் அவென்யூ மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் குறைகளை, தெரிந்துகொள்ள மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் MC தலைமையில், சுகாதாரப்பிரிவு அதிகாரி திரு.நாகராஜ்(SO), கண்காணிப்பாளர் திரு.கார்மேகம்(SS), வருவாய்ப்பிரிவு ஆய்வாளர் திரு.பிரபாகரன்(RI), திரு.ரவிச்சந்திரன்(BC) மற்றும் பொறியாளர் பிரிவு திருமதி.ஜீவித்ரா(TA) மற்றும் அங்குள்ள பொதுமக்கள்கள் கலந்து கொண்டு மாநகராட்சியின் மூலம் எடுக்கப்படவேண்டிய வளர்ச்சி பணிகள் மற்றும் குறைகளும் அதற்குண்டான பொருட்கள் […]

மாணவர்களை ஈடுபடுத்துவதே ‘நிகர பூஜ்ஜிய உமிழ்வு நாடு’ என்பதை அடைவதற்கான சிறந்த வழி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிரீன் டெர்ரே அறக்கட்டளையுடன் இணைந்து கார்பன் நடுநிலைமைக்கான நடவடிக்கைகளுக்கான வரைபடத்தை வரைவதற்காக U75: Net Zero University Campus Regional Workshop ஐ நடத்தியது. கார்பன்-நியூட்ரல் வளாகங்களை உருவாக்க தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் உயர் கல்வி நிறுவனங்களை சித்தப்படுத்துவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை […]

எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் ஆருஷ் 23-தேசிய அளவிலான 4 நாள் தொழில்நுட்ப திருவிழா-90,000 மாணவர்கள் பங்கேற்பு

நிறைவு விழாவில் நாட்டின் முன்னணி உணவு விஞ்ஞானி கே. ராஜகோபால் ‘பிரதிபலித்தல்’ என்ற ஆண்டு இதழை வெளியிட்டார் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST) சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற, தேசிய அளவிலான கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST SRM Insititute of […]

சுவர் இடிந்து விழுந்து பல்லாவரத்தில் பெண் பலி.

ஜமீன் பல்லாவரம் பாரதி நகரை சேர்ந்தவர் சத்தியவாணி (55) வீட்டு வேலை செய்து வந்தார் இவருடைய கணவர் கண்ணியப்பன் கூலி வேலை செய்து வருகிறார், நேற்று இரவு சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் குளிச்சியான சூழல் நிலவியது இதனால் சத்தியவாணி கீழ் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக கூறிவிட்டு மொட்ட மாடியில் தூங்குவதற்கு சென்றுள்ளார், இன்று அதிகாலை அருகே சரவணன் என்பவரின் வீட்டின் சுற்று சுவர் சத்தியவாணி தூங்கி கொண்டிருந்த வீட்டின் சுற்று சுவர் மீது […]

குரோம்பேட்டையில் சாக்கடையில் மிதக்கும் நடேசன் நகர் | டெங்கு பரவும் அபாயம்

குரோம்பேட்டை நடேசன் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது. தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மற்றும் பல இடங்களில் உள்ள கழிவுநீரும் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் ஓடுகிறது.தாம்பரத்தில் மழை பெய்த போது கூட மற்ற பகுதிகளில் மழை நீர் உடனடியாக வடிந்துவிட்டது. ஆனால் இந்த பகுதியில் மழை நீர் கால்வாய் காணாமல் போய்விட்டதால் தெருக்களில் தண்ணீர் தேங்கி […]