விஜயிடம் சிபிஐ விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை. நடத்துகிறது இந்த விசாரணைக்கு வரும் படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது . இதற்காக அவர் தனி விமானத்தில் டெல்லி சென்றார். இன்றும் நாளையும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதால் விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வைகோ பாத யாத்திரை இன்று நிறைவு
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை மதுரையில் இன்று நிறைவு செய்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓபுளா படித்துறை பகுதியில் நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
எடப்பாடி டெல்லி பயணம்
பாமக உடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை அவர் பாஜக தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு முடிவாகும் என்று தெரிகிறது.
அதிமுக – பாமக கூட்டணி உறுதி! எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்பொழுது பாமகவும் கூட்டணியில் இணைந்து உள்ளது. இது இயற்கையாக அமைந்துள்ள கூட்டணி. மேலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்து விட்டோம். இதற்கான அறிவிப்பை பின்னர் அறிவிக்கிறோம் என்று கூறினார். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பத்தின்படி இந்த கூட்டணியை அமைத்து உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் […]
அதிமுக ஆட்சியமைக்கும்: அன்புமணி.
வரும் பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த விரும்பிய (அதிமுக – பாஜக) கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். வலுவான கூட்டணி. எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம். காரணம் சமீபத்தில் கூட நடைப்பயணம் மேற்கொண்டபோது திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் […]
ஆட்சியில் பங்கு கேட்க உறுதியாக இருக்கிறோம். – கே.எஸ் அழகிரி
திருவாரூரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது: ஒவ்வொரு அரசியல் கட்சியும் வளர வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என சொல்வது நியாயமானது. இதை காங்கிரஸ் கட்சி மட்டும் சொல்லவில்லை. வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட்களும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. : அன்பு மணி பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம்
சென்னை:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின், எடப்பாடி பழனிசாமி- அன்புமணி இடையே நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அதிமுக – பாமக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “அனைத்திந்திய அண்ணா திராவிட திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள […]
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் திமுக ஆட்சிக்கு பின்னடைவு
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சரியானது. அறநிலைத்துறை கோவில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் அந்த தீபத்தூண் கோவில் எல்லைக்குள் தான் உள்ளது என்று அதிரடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது என நீதிபதிகள் […]
பட்டியல் இன தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு – எடப்பாடி வாக்குறுதி
தமிழகத்தில் வீடு இல்லாதவருக்கு வீடு கட்டி கொடுக்க பசுமை வீடுகள் திட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ,பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஆகிய வீடுகள் உள்ளன.இந்த நிலையில் எடப்பாடி பேசுகையில் “திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்” என்று கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் கவர்னரிடம் எடப்பாடி பரபரப்பு புகார்
திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், என்றும் தமிழக கவர்னரிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் கவர்னரை சந்தித்து ஊழல் பட்டியலை கொடுத்து, ஒவ்வொரு துறைகளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தனது மனுவில் அவர் கூறியிருக்கிறார்.