டிரம்புடன் பேச தயார் -மோடி அறிவிப்பு
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்று அவர் கூறினார் .மோடியுடன் பேச தயாராக இருப்பதாக ட்ரம்பும் அறிவித்தார்
தமிழகத்தில் 45 மாதத்தில் 6700 கொலை. – எச்.ராஜா
பா.ஜ.க தலைவர் எச்.ராஜா கூறியதாவது :தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளன. பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள்பயன்பாடு அதிகரித்துள்ளது. மீண்டும் திமுக அரசு அமைந்தால் அடுத்த தலைமுறை அழிந்து போகும். எனவே, அடுத்த தலைமுறையை காப்பாற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அரசியலில் இருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரிப்பு
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார் நேபாள தலைநகரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன பாராளுமன்றம் தொலைக்காட்சி உறுப்பினர் பாரக கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு மோடி வாழ்த்து
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிபி ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் மேலும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் சி பி ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது என்று கூறினார்
டெல்லியில் செங்கோட்டையன் அமித்ஷா சந்திப்பு
டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .இதற்கிடையே செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார்.
மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கம்
மதிமுகவில் இருந்து மல்லை சத்தியாவை நிரந்தரமாக நீக்கி பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மல்லை சத்யா கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மல்லை சத்யா மதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தலைமைச் செயலகம் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
*சென்னை தலைமை செயலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. *காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது.இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் மீது 800 டிரோன் ஏவி ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரைன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் நேற்று நடந்துள்ளது
பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் நரேந்திர மோடி
பாஜக எம்பி.க்களின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
ஹரித்துவாருக்கு ஆன்மீக பயணம் செல்லும் செங்கோட்டையன்
இன்று டெல்லி புறப்பட்டுச் சென்ற செங்கோட்டையன்கோவையில் செய்தியாளர்களிடம் கூறியது: “ஹரித்துவாரில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்கிறேன். மனம் சரியில்லாததால் கோயிலுக்குச் செல்வதற்காக வந்திருக்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை. 9-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. கலங்கிப் போய்விட வேண்டாம், நியாயமான கோரிக்கையைத்தான் வைத்துள்ளீர்கள் என தொண்டர்கள் சொல்கிறார்கள்.