காலணி கழற்ற வந்த ஊழியரை மறுத்த ராம்நாத் கோவிந்த்
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தென்காசிக்கு வந்தார். தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த அவருக்கு அளிக்கப்பட்ட பூரண கும்பம் மரியாதையை பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சென்று அதன் நிறுவனர் தலைவர் ராமகிருஷ்ணன் செயலாளர் சங்கர் ராமன் ஆகியோரை சந்தித்தார்.அவர் கோயிலுக்கு வந்த போது ஊழியர் ஒருவர் அவரது காலணியை கழற்ற முன் வந்தார் ஆனால் ராம்நாத் அதனை தடுத்து விட்டார் தானே தனது […]
அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயிறு தொடர்பான பிரச்னைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காலணி கழற்ற வந்த ஊழியரை தரத்த ராம்நாத் கோவிந்த்
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தென்காசிக்கு வந்தார். தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த அவருக்கு அளிக்கப்பட்ட பூரண கும்பம் மரியாதையை பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சென்று அதன் நிறுவனர் தலைவர் ராமகிருஷ்ணன் செயலாளர் சங்கர் ராமன் ஆகியோரை சந்தித்தார்.அவர் கோயிலுக்கு வந்த போது ஊழியர் ஒருவர் அவரது காலணியை கழற்ற முன் வந்தார் ஆனால் ராம்நாத் அதனை தடுத்து விட்டார் தானே தனது […]
விஜயுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சு
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்வது குறித்து காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக டெல்லியில் தகவல் பரவி உள்ளது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் டெல்லியில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தை சந்தித்ததாகவும் இதற்கு ஒரு காங்கிரஸ் எம்பி ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை முதல்வராக ஏற்கவும் காங்கிரஸுக்கு 70 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது.
தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அக்டோபர் 14ம் தேதி சட்டசபை காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும். முதல் நாளில், மறைவுற்ற முன்னாள் சட்டசபை எம்எல்ஏக்கள் குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். வால்பாறை தொகுதி எம்எல்ஏ கந்தசாமி மறைவு குறித்தும் உயிரிழந்த பிரபலங்கள் குறித்தும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு முன்னதாக ஏதாவது ஒரு தேதியில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டசபை கூட்டம் எத்தனை […]
டிரம்புக்காக போக்குவரத்து நிறுத்தம்: அமெரிக்காவில் பிரான்ஸ் அதிபர் திணறல்!
அதிபர்டிரம்ப் வருகையை முன்னிட்டு நியூயார்க்கில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் செல்ல வழியின்றி தவித்தார். இதை அடுத்து டிரம்ப்புக்கு போன் செய்தார் மேக்ரோன்,‘உங்கள் வருகையால் சாலையை மூடி விட்டார்கள். நான் வீதியில் நிற்கிறேன்’ என்று சிரித்துக் கொண்டே கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
டிடிவி தினகரனுடன் அண்ணாமலை சந்திப்பு
பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்துவிட்டு, மாற்றுக் காரில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு அண்ணாமலை வந்தார். அங்கு டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்திப்பின்போது, கூட்டணியில் தொடர்ந்து இருக்குமாறு தினகரனை அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
அண்ணாமலை தனிக்கட்சியா ?
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி வருமாறு:-தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக யாரும் பேசினால் அவரை பாஜகவின் பி டீம் என்று திமுக சொல்கிறது. ரஜினியை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன், நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். எனவே அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். முதலில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு வரிகள் இருந்தன. இதனால் முதன் முறையாக ஜிஎஸ்டியை கொண்டுவந்தபோது 4 அடுக்கு தேவைப்பட்டது. இப்போது அதனை இரு அடுக்குகளாக குறைத்துள்ளோம்” என்றார். நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க […]
ராதிகா தாயார் மறைவுக்கு கனிமொழி இரங்கல்
நடிகை ராதிகாவின் தாயார் கீதா இவர் மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் துணைவியாவார் இலங்கையைச் சேர்ந்தவர் 80 வயதானவர் உடல்நலம் குறைவு காரணமாக மரணம் அடைந்தார் அவரது மறைவுக்கு கனிமொழி எம்பி மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து
சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு எப்படி வரநேர்ந்தது என்பது குறித்து சிந்தி நண்பர்களிடம் ஏராளமான கதைகளை கேட்டிருக்கிறேன். இந்தியாவில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பி சிறப்புடன் உள்ளனர். அதேபோன்று, விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் வல்லுநர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் செழித்து வளர்ந்துள்ள சிந்தி சமூகத்தினரைப் போல […]