அண்ணாமலைக்கு 755 வது இடம்
கோவையில் இந்திய அயன் மேன் போட்டி நடந்தது இதில் அண்ணாமலை கலந்து கொண்டு நீச்சல் சைக்கிள் ஓட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டார் 805 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் அண்ணாமலைக்கு 755 ஆவது இடம் கிடைத்ததது.
நவம்பர் 15ஆம் தேதி சீமான் நடத்தும் தண்ணீர் மாநாடு.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன. இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் ‘15 -ந்தேதி தண்ணீர் மாநாட்டை’ நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது
அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்! – டிரம்ப் திட்டம்!!
அமெரிக்காவில் வாழும் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்புகள் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வரி வருவாயைப் பகிர்ந்து, அமெரிக்க மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
SIR என்றாலே திமுக அலறுது, பதறுது – எடப்பாடி பழனிசாமி.
முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவிடுத்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என S.I.R. வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது. SIR என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது-அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. “எஸ்ஐஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதியவைத்தால் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அதிமுக வழக்கில் இணைந்துள்ளது “ கால அவகாசம் போதாது என திமுக சொல்கிறது; 8 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் இந்த படிவத்தை கொடுத்துவிடலாம் […]
ரோடு ஷோ நடத்த புதிய நிபந்தனைகள்
அரசியல் கட்சித் தலைவர்கள் ரோடு ஷோ நடத்த புதிய நிபந்தனைகளை அரசு வெளியிட்டுள்ளது இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதன்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்றால் தான் ரோடு ஷோ நடத்த முடியும் மேலும் வரும் கூட்டத்திற்கு ஏற்ப டெபாசிட் ரூபாய் 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை கட்ட வேண்டும் 10 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் பேச 21 […]
மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற மகளிர் கிரிக்கெட் அணி
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது இதனைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. நேற்று உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
மேயா், ஆளுநா் தோ்தல்கள்: டிரம்ப்புக்கு பின்னடைவு
அமெரிக்காவின் நியூயாா்க், சின்சினாட்டி நகரங்கள், விா்ஜீனியா, நியூஜொ்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தல்களில் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இது, அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள முதல் மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. இதில், நியூயாா்க், சின்சினாட்டி நகர மேயா் தோ்தல்களிலும், விா்ஜீனியா துணை ஆளுநா் தோ்தலிலும் இந்திய வம்சாவளி இஸ்லாமியா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.
அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருள் எம்.எல்.ஏ-வை தாக்கிய சம்பவத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் 25 பேர் மீது ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ஆதரவாளர் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், ராமதாஸ் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் தமிழகம் பீகாராக மாறும் – சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியதாவது:- எஸ்ஐஆர் விவகாரத்தில் பாஜக தேவையற்ற வேலையைச் செய்கிறது. மக்களை பதற்றமாகவே வைத்திருக்கப் பார்க்கிறார்கள். அப்போதுதான் செய்கிற தவறு வெளியே தெரியாமல் இருக்கும். ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயர்களை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் இப்போது தெரிவிக்கிறது. இரண்டு மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும்? பிஹார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையைச் செய்கிறார்கள். அப்படி வழங்கும் […]
பீகாரில் நாளை முதல்கட்ட தேர்தல்
பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.