நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!
திருநெல்வேலியில் ரூ.56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 21-ம் தேதி திறந்து வைக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தமிழர்களின் பண்பாடு, ஆரம்ப காலம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை முதல்வரே தேர்வு செய்தார். இந்த அருங்காட்சியகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ம் தேதி அடிக்கல் நாட்டியதுடன் ரூ.56.36 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார். […]
குடியரசுத் தலைவர் டிச. 17-ல் வேலூர் வருகை!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிச. 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்கிறார் வேலூரில் தங்கக் கோவிலை பார்வையிடுகிறார்குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிச. 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்கிறார் வேலூரில் தங்கக் கோவிலை பார்வையிடுகிறார்
விஜய் கூட்டத்துக்கு புதிய கட்டுப்பாடு
ஈரோட்டில் தமிழக வெட்டி கழக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது இதற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளில் ஒன்று“போதுமான CCTV-க்கள் அமைத்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் முழுவதையும் கண்காணிக்க கண்காணிப்பு அறை ஏற்பாடு செய்ய வேண்டும். Drone Camera மூலம் நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ பதிவு செய்து காவல்துறை வசம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது
சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில் ‘உரிமை மீட்பு குழு’ என்பதற்கு பதிலாக ‘உரிமை மீட்பு கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஓபிஎஸ் சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. […]
வெள்ளி சிம்மாசனத்தில் ஸ்டாலின்
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெள்ளி சிம்மாசனம் பரிசளிக்கப்பட்டது.
பொங்கல் கொண்டாட தமிழகம் வரும் மோடி.
தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவர் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக வரவுள்ளார் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பிரச்சார முன்னோட்டம் தான் இந்த நிகழ்ச்சி என கூறப்படுகிறது.
சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: நிர்மலா சீதாராமன் 24வது இடம்
பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள, 2025க்கான உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட நம் நாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்று உள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025க்கான பட்டியலை அந்த பத்திரிகை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் […]
ஈரோடு விஜய் கூட்டதிற்கு 50000 கட்டணம்
விஜய் மக்கள் சந்திப்பு – இந்து அறநிலையத்துறை நிபந்தனை விதித்து உள்ளது. ஈரோடு, விஜயமங்கலம் அருகே வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ரூ.50,000 வைப்புத்தொகை மற்றும் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும் என 5 நிபந்தனைகளுடன் அனுமதி இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்! – பாஜக அறிவிப்பு
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகம்:
மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் தூங்கும் வீடு இல்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்திலேயே இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும். இவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது