இந்தியா உடன் ராணுவ உறவை வலுப்படுத்திய ரஷ்யா!

இந்தியா – ரஷ்யா இடையே ராணுவப் படைகளை பரிமாறிக்கொள்ளும் RELOS ஒப்பந்தத்தை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றிய கூட்டாட்சி சட்டத்தில் கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புதின்! இதன் மூலம் ரஷ்யாவின் வீரர்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும், அதேபோல் இந்தியாவின் படைகள் ரஷ்யா செல்வதற்கும் வழிவகை செய்கிறது. ராணுவப் பயிற்சி, பேரிடர் பணிகள் மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இந்த ஒப்பந்தம் பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் தொகுதிகள் எவை? – பரபரப்பான தகவல்கள்…

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. சென்னை முதல் குமரி வரை 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. சோளிங்கர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, கொளத்தூர், மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன. கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், பாலக்கோடு, ஒட்டன்சத்திரம், […]

SIR பணிகள் – 58 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கம்!

மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது இறந்தவர்கள் 24 லட்சம், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் மற்றும் போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் உள்பட 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிப்பு

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினை அடுத்தடுத்து சந்திக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள்

திமுக கூட்டணி தலைவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் சந்தித்தார்கள் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சந்திப்பு என தகவல்

சோனியாவுக்கு எதிரான குற்றப்பத்திகையை ஏற்க கோர்ட் மறுப்பு

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடருமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொங்கு பகுதிகளில் அதிக விவாகரத்து – அண்ணாமலை தகவல்

திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது: இந்து மதத்தினர் அதிக அளவில் விவாகரத்து செய்கின்றனர். அதுவும் கொங்கு பகுதிகளில், அதிக அளவு விவாகரத்து நடக்கிறது. தற்போதுள்ள ஜென்சி மற்றும் ஜென் ஆல்ஃபா போன்ற தற்போதைய தலைமுறையினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் உள்ளது. அவர்களுக்கு ஆன்மீகவாதிகளும், துறவிகளும் போதிக்க வேண்டும். என்றார்

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் டிச.21-ல் திறப்பு!

திருநெல்வேலியில் ரூ.56.36 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 21-ம் தேதி திறந்து வைக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தமிழர்களின் பண்பாடு, ஆரம்ப காலம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை முதல்வரே தேர்வு செய்தார். இந்த அருங்காட்சியகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மே 18-ம் தேதி அடிக்கல் நாட்டியதுடன் ரூ.56.36 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார். […]

குடியரசுத் தலைவர் டிச. 17-ல் வேலூர் வருகை!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிச. 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்கிறார் வேலூரில் தங்கக் கோவிலை பார்வையிடுகிறார்குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, டிச. 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம்செய்கிறார் வேலூரில் தங்கக் கோவிலை பார்வையிடுகிறார்