மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற பேச்சுவார்த்தை – எடப்பாடி பழனிசாமி பேட்டி

நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சட்டசபை […]

அதிமுக 170 தொகுதிகளில் போட்டி..???

தேசிய ஜனநாயக கூட்டணியில் 170 இடங்களில் போட்டியிடும் வகையில் அதிமுக வியூகம் வகுத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் பாமக, தேமுதிகவுடன்d பேச்சுவார்த்தை நடத்தும் பணியை அதிமுக மேற்கொள்ளும் எனவும், டிடிவி தினகரன், OPSடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் இணைக்கும் பணியை பாஜக மேற்கொள்ளும் என தகவல்

கூட்டணி விரிவாக்கம்? பியூஷ் கோயல் – இபிஎஸ் சந்திப்பு!

திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை இணைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது

சென்னை மருத்துவமனையில் கேரள முதல்வர் அனுமதி

கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 1000 வழக்கில் உள்ள அந்த மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

சமூக ஒற்றுமையை காப்பேன் -விஜய் உறுதி

தமிழக வெற்றி கழக தலைவர் என்று சமத்துவ கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினார் இதில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் அவரது கட்சி நிர்வாகிகள் பாஸ் வழங்கி . இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சமூக, மத ஒற்றுமையை 100% காப்பேன் என்று உறுதி கூறினார் மேலும் உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும் என்று அவர் கூறினார்.மேலும் பைபிளில் இருந்து யோசேப்பு கதையை சொல்லி வெற்றி பெறுவோம் என்று கூறினார்

பாஜக பொறுப்பாளர் பியுஷ் கோயல் எடப்பாடி உடன் சந்திப்பு

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார் .அவர் நாளை சென்னை வருகிறார். அப்போது அவரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள். அவர் முன்னதாக கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கிண்டி ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்கிறார்கள்

மலேசியாவில் விஜய்க்கு கட்டுப்பாடு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன்படத்தில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது வருகிற 27ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது இந்த நிகழ்ச்சியில் அரசியல் எதுவும் பேசக்கூடாது என்று மலேசியா அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளது

லிவ் இன் உறவுகள் குற்றமில்லை – அலகாபாத் உயர் நீதிமன்றம்.

“Adult வயதை எட்டிய இருவர், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவர்களின் தனியுரிமை. சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக குற்றமாகக் கருத முடியாது” லிவ்இன் உறவு முறை சட்ட விரோதமானது இல்லை எனக்கூறி குடும்பத்தினரால் மிரட்டலுக்கு உள்ளாகும் 12 ஜோடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

களத்தில் இருப்பது யார்?விஜய்க்கு சீமான் பதில்

ஈரோட்டில் பேசிய நடிகர் விஜய் திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி மத்தவங்களை எல்லாம் களத்தில் இல்லை அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்று கூறினார் எது குறித்து சீமானிடம் கேட்டபோது நானும் களத்தில் இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார்