விஜய் போலவே ஹோலோ கிராம் தயாரித்து பிரச்சாரம்

விஜய் போல தயாரிக்கப்பட்ட முப்பரிமாண ஹோலோகிராபிக் உருவம்-Holographic Illusional Display வகையறா. அதாவது களத்தில்,நிஜத்தில்,நேரில் இல்லாத ஒன்றை,இருப்பது போல் காட்டும் மாயத்தோற்றம் .இந்த மாயத் தோற்றத்தை பார்ப்பதற்கு எந்த விதமான ஸ்பெஷலான கண்ணாடிகள் கூட தேவையில்லை.வெறும் கண்களால் கூட பார்க்கலாமதொழில்நுட்பத்தில் விஜய் உருவத்தை உருவாக்கி,அதில் அவரது குரலை இணைத்து,விஜய் பேசுவது போல் செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்,கும்பகோணம் தொகுதியின் தவெக வேட்பாளர் வினோத்…

யாருக்கும் அடிமை இல்லை: இபிஎஸ்.

மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறிய கர்நாடக அமைச்சருடன் இணைந்து பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்; விவசாயிகளின் விரோதியாக ஸ்டாலின் உள்ளார். தேர்தல் பரப்புரை தொடங்கியதில் இருந்து என்னைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார் ஸ்டாலின். பாஜகவுக்கு அதிமுக அடிமை என பேசி வருகிறார்; எங்கள் கட்சி தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை. இஸ்லாமியர்களுக்கும் ஏகப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். இஸ்லாமிய மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறிக்கொண்டு தான் இருக்கும். கொள்கை […]

மகளிருக்கு மாதம் ரூ. 3,000! பாஜகவின் தேர்தல் அறிக்கை…

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். மேற்கு வங்க தேர்தலையொட்டி கொல்கத்தா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன்படி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் எந்த ஊடுருவல்காரர்களையும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படாது, […]

அண்ணாமலை, விஜய் வாகனத்தில் சோதனை.

உதகையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை. உதகையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்றிருந்த நிலையில், சுமார் 10 நிமிடங்கள் சோதனை நடத்தப்பட்டது. காரைக்குடி அருகே தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை. மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் எஸ்.எஸ். கோட்டை அருகே அவரது வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மெட்ரோ ரயில் ஸ்டாலின் ஓட்டு வேட்டை

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் ஏறி ஆதரவு திரட்டினார். பயணிகளுடன் நேரில் பேசி ஓட்டு வேட்டையாடினார் பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்

உதயநிதி பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

கடலூரில் துணை முதல்வர் உதயநிதிபிரசாரத்திற்கு நாளை அனுமதி மறுக்கப்ப்பது விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்ட‌தால் துணை முதல்வர் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தவெக தரப்பில் முதலில் விண்ணப்பித்திருந்ததால் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி தாட்யட்டது துணை முதல்வரின் கடலூர் பிரசாரம்வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது

எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாய நிலமே கிடையாது

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் அசையும் சொத்து*ரூ.50 லட்சம்உள்ளது அசையா சொத்து ஏதுமில்லை. எடப்பாடி பழனிசாமி பெயரில் விவசாய நிலம் ஏதும் இல்லை. மனைவி ராதா பெயரில்6 இடங்களில் நிலமும்,பண்ணை வீடும் உள்ளது. மேலும் அவரது பெயரில்ரூ.3.45 கோடி அசையா சொத்து; ரூ.2.16 கோடி அசையும் சொத்து உள்ளது என்றுஎடப்பாடி பழனிசாமிதாக்கல் செய்த வேட்புமனுவில் தகவல். தெரிவிக்கப் பட்டு உள்ளதுஎடப்பாடி தன்னை விவசாயி என்று கூறி வருகிறார் ஆனால் அவரிடம் விவசாய நிலம் இல்லை […]

பெரம்பூரில் விஜய் மனு ஏற்பு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறார் அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது சில தகவல்கள் மாறி இருந்தன.பின்னர் கூடுதல் பத்திரம் தாக்கல் செய்தார் இன்று வேட்பு மனு பரிசீலனையின் போது பெரம்பூர் மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தனர் திருச்சி மனுவும் ஏற்கப்பட்டது

ஆதவ் அர்ஜுனா மனு நிறுத்திவைப்பு

தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் அவரது மனுவை ஏற்க கூடாது என்று பல்வேறு புகார்கள் வந்தன இதன் காரணமாக தேர்தல் வேட்பாளர் வந்து மனுவை பரிசீலனை செய்ய இருக்கிறார் அதுவரை மனுவை ஏற்பதை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது

எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்!

அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இந்த நிலையில், சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நடத்தும் அலுவரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 8-வது முறையாக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் […]