பம்மல் எண்ணை கடையில் ஐம்பதாயிரம் கொள்ளை சிசிடிவியில் பரபரப்பு காட்சிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காந்தி மெயின் ரோடு சங்கர் நகர் பகுதியில் சிவகேசன் என்பவர் 3வருடங்களாக ஆயில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டி மற்றும் சாமி உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சிசிடிவி காட்சியை ஆதாரமாக வைத்து […]

தளபதி விஜய் நூலகம் தாம்பரத்தில் திறப்பு

தாம்பரம், பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விஜய் விலையில்லா மருந்தகம்’, ‘விஜய் விழியகம்’, ‘விஜய் பயிலரங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தினை இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் […]

தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌ , சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை …

தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌ (15.11.2023) உடல்நலக்‌ குறைவால்‌ காலமான மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மூத்த தலைவர்‌ திரு.என்‌. சங்கரய்யா அவர்களின்‌, சென்னை குரோம்பேட்டை இல்லத்திற்கு. நேரில்‌ சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ . இ. கருணாநிதி, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளர்‌ .கே. பாலகிருஷ்ணன்‌, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி நிர்வாகிகள்‌ மற்றும்‌ சங்கரய்யா குடும்பத்தினர்‌ உள்ளனர்‌.

தோழர் என்.சங்கரய்யா காலமானார் இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும்

முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) வயது உடல் நலக் குறைவின் காரணமாக நவம்பர் 15, 2023 காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும், மதியம் 2 மணி முதல் தியாகராய நகர், வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது. இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10 மணியளவில், சி.பி.ஐ(எம்) […]

மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு .

பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

தோழர் சங்கரய்யாவின் மறைவு தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பு .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக, நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 3 […]

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் N. சங்கரய்யா காலமானார்.

1 தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி. 2.அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று… 3.படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்… 4 தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் […]

படிப்புக்காக உணவு விநியோகம்: பல்லாவரம் மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன்(19), சேலையூர் பாரத் கல்லூரியில் மெக்கனிக்கல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலம் உணவு விநியோகம் செய்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கிவிசப்பட்ட மகேஸ்வரன் தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு […]

பல்லாவரத்தில் நடுரோட்டில் லாரி டிரைவர்கள் டாக்டர் தம்பதியினரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த டாக்டர் மேகசியான் (வயது-33) இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தாரணி இவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பல்லாவரம் ரேடியல் சாலையில் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி இருவரும் சென்ற கார் மீது லாரி மோதியது இதில் கார் சேதமான நிலையில் காரின் உரிமையாளர் லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு […]

அதிகாரிகள் அலட்சியம் மழை நீர் கால்வாயில் விழுந்த பெண் படுகாயம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாவரத்தில் மழைநீர் வடிகால்வாயில் விழந்த வயதான பெண்ணுக்கு மார்பு, கையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் பணியை மேற்கொண்டதால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் மெயின் ரோடு பஜனை கோயில் தெரு கண்டோன்மென்ட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மழை நீர் தேங்கும் பிரச்சனை இருந்து வந்ததால், அதனை தவிர்க்க மழை நீர் […]