சென்னை விமான நிலைய அவலம்
“இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் நுழைவாயில் – சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மக்களை இப்படித்தான் வரவேற்கிறார்கள்: எங்கும் போஸ்டர்கள் மயம். தெருவிளக்குகள் எரிவதில்லை. இதற்குக் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை என எந்த அமைப்பும் பொறுப்பேற்பதில்லை. இது மிகவும் மோசமானது.
சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் செயின் பறிப்பு
சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று மதியம் வகுப்பு முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். இந்து மிஷன் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லுங்கி மற்றும் சட்டை அணிந்துகொண்டு சாதாரணமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாய்ந்து வந்து, மாணவி அணிந்திருந்த 7 பவுன் தாலி […]
சென்னை : 502 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை
ஏழை எளியேரை நேசிக்கவே இயேசு பிரான் மண்ணில் அவதரித்தார். தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் அமைதி நிலவி சகோதரத்துவம் பெருக, அருட்தந்தை ஏ.டி.மைக்கல் சிறப்பு பிராத்தனை செய்தனர். 502 ஆண்டுகள் பழமையான சென்னை புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு திருப்பலில் அருட்தந்தை ஏ.டி.மைக்கல் தலைமையில் நடைபெற்றது, ஆலைய வளாகம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இயேசு பிறப்பை எல்.ஈ.டி திரையில் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியால் விடியோ காட்சி திரையிட்டுட்டு […]
அனகாபுத்தூர் பெட்ரோல் பங்கில் ஏசி எந்திரம் வெடித்து மூணு பேர் படுகாயம்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று புதியதாய் திறக்கப்பட உள்ளது,அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்.அதன் அலுவலகத்தில் புதிய ஏசி இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது. அதனை கள்ளக்குறிச்சி மாவட்டம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சையத் சபீர்(வயது-22), முகிர்தீன்(வயது -24) மற்றும் சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சபிருல்லா(வயது-25) ஆகிய மூன்று பேர் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அறையின் உள்ள புதிய ஏசியை பொறுத்தி […]
பல்லாவரம் அருகே குப்பை கொட்ட வந்த லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!
சென்னை, பல்லாவரம் அருகே சாலையோரம் குப்பை கொட்ட வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஷ்வேசபுரம் பகுதியில் குப்பை கொட்டும் இடம் உள்ளது. இன்று காலை, நாகல்கேணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து குப்பை கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி திடீரென பழுதடைந்து சாலையோரம் நின்றது. அப்போது, அங்கிருந்த குப்பைகளில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு லாரியில் உள்ள குப்பைகளிலும் பற்றிக் […]
தாம்பரம் மாநகராட்சி முன்பு முதியவர் திடீர் போராட்டம்
பல்லாவரம், குரோம்பேட்டை பகுதி யில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். பல்லாவரம் பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குரோம் பேட்டைராதாநகர் நாயுடு ஷாப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிறு பாலத்தை உடைத்து விட்டு புதிய பாலம் கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரோம்பேட்டை கட்டபொம்மன் குறுக்கு தெரு வைச் சேர்ந்த கோதண்டபாணி (வயது 74) என்ற முதியவர், தாம்பரம் மாநகராட்சி அலுவலக நுழைவு […]
தாம்பரத்தில் ஆறு மாதமாக நகராத படிக்கட்டு
தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தேசிய சித்த மருத்துவம் அருகே உள்ள பொதுமக்கள் சாலை கடக்கும் மேம்பாலத்தின் நகரும் படிக்கட்டு உள்ளது. இது சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வேலை செய்யவில்லை,இது குறித்து புகார் அளித்தால் தற்போது வரை எந்த நடவடிக்கை இல்லை, அதன் அருகே கட்டப்பட்டு வரும் மின் தூக்கி வேலையும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, இதனை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல்லாவரம் சமூக ஆர்வலர்செய்யது சம்சுதீன்,கோரிக்கை […]
போலீஸ் பறிமுதல் செய்த 9 வாகனங்கள் திடீர் தீயில் சாம்பல்
பல்லாவரம் அருகே போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த 9 வாகனங்கள் திடீரென்று பிடித்த தீ விபத்தில் எரிந்து சாம்பலாயின.
தாம்பரம் அருகே வீடு புகுந்து கொள்ளை | 2 பேர் கைது
சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) இவர் வீட்டின் முதல் மாடியில் தனது மனைவி வேளாங்கனி மற்றும் மூத்த மகன் வினோத்குமார் என்பவருடன் வசித்து வருவதாகவும் கீழ் தளத்தில் இளைய மகன் சதீஷ்குமார் அவரது மனைவி ராதா ஆகியோர் வசித்து வருகின்றனர். சென்ற மாதம் தல பொங்கலுக்கு கீழ் தளத்தில் உள்ள தனது மகன் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் சேகர் காலை கீழே உள்ள வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றவர் […]
பல்லாவரத்தில் கருணாநிதி நினைவு நாள்

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு நாள் பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் திமுகவினர் மலர்துவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 6 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி பல்லாவரம் தொகுதி திமுக சார்பாக குரோம்பேட்டையில் மலர் அளங்காரம் செய்யப்பட்ட கலைஞரின் திரு உருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ், மண்டலகுழு தலைவர்கள் ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி பகுதி செயலாளர்கள் பெர்ணட், […]