டிரம்ப் தொடங்கிய புதிய சர்வதேச அமைப்பு
ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த புதிய அமைப்பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.பிரதமர் மோடிக்கும் அழைப்பு வந்துள்ளது.
சச்சின் சாதனையை முறியடித்த கோலி
இந்தூரில் நேற்று நடந்த கடைசி ஒரு நாள் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி மூலம் கோலி 35 மைதானங்களில் தன் ஒரு நாள் சதங்களை எடுத்துள்ளார். இதில் இந்தூர் சதம் கடைசியாக சேர்ந்தது. இதிலும் சச்சின் டெண்டுல்கரை கடந்து விட்டார் கோலி. சச்சின் 34 மைதானங்களில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
பராசக்தி ஹீரோ நான் தான் – சீமான்
பராசக்தி’ படத்தில் வரும் செழியன் நான் தான். தமிழ் வாழ்க என சிவகார்த்திகேயன் கத்துவதைப் பார்க்கும் போது, நானே கத்தியது போல இருந்தது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனையாகி வருகிறது.
அஜித் குமார் உடன் கார் பந்தயத்தில் செல்ல கட்டணம்
துபாயில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோடிரோமில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது அஜித்குமார் ஓட்டும் காரில் அவருடன் செல்வதற்கு 86 ஆயிரத்து 475 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை கட்டி காரில் அவருடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
விஜய் ஆலோசகர் கைதாக வாய்ப்பு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தேர்தல் யூக ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி செயல் பட்டு வருகிறார் அவர் கட்சியின் மாநாடு மட்டும் பொதுக்கூட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நீதி பெற்று தந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் அடிப்படையில் அவர்கள் விசாரணை நடக்கிறது. அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன
நடிகர் விஜய் இடம் சி.பி.ஐ அதிரடி கேள்வி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு போய் உள்ளார்.இன்று அவரிடம் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசும் போதே நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியாதா? என்பது உட்பட பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர் .வழி நெடுக அலங்கார வளைவுகள் இருந்ததால் கூட்டத்துக்கு வர தாமதம் ஆனதாக விஜய் கூறினார். இது தொடர்பான ஆதாரங்களை உடனே காட்டும் படி சி.பி.ஐ உத்தரவிட்டது.
புதிய நீர்த்தேக்கம் அமைக்க எதிர்ப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரம் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் கூறும் போது வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி! கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன் என்றார்.இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஏற்பு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை குடும்ப விழா ஆக்குவதா ?-அதிமுக கண்டனம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மரபுபடி காலை 7 மணிக்கு தெடாங்காமல் துணை முதல்வர் உதயநிதிக்காக ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தி, போட்டியை காண வந்த மக்களையும், போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளைகள், அதன் உரிமையாளர்களை வேதனைப்படுத்தலாமா? என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்டாலினுக்காகவும் உதயநிதிக்காகவும் நடத்துவது போல் குடும்ப விழா ஆக்குவதா என்று அவர் கேள்வி கொடுத்தார்
கடற்கரை செல்வோர் கவனிக்க…
சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பை கொட்டுவோருக்கு ரூ.5000 அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை. நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்; தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் அறிவுறுத்தல்.