வளர்ப்பு நாய்க்கு துலாபாரம் கொடுத்த தெலுங்கு நடிகை!
தனது வளர்ப்பு நாய்க்குத் ‘துலாபாரம்’ (வெல்லம்/தங்கம்) வழங்கிய விவகாரம் தொடர்பாக, தெலுங்கு நடிகை டீனா ஸ்ராவ்யா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். தனது நாய் உடல்நலக் குறைவிலிருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக வேண்டியிருந்ததாகவும், அந்த பக்தியினால் தான் அவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தையோ அல்லது சடங்குகளையோ கொச்சைப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், இந்தச் செயலால் பக்தர்கள் யாராவது மனவேதனை அடைந்திருந்தால் மன்னிக்கும்படியும் அவர் ஒரு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயன்றால் ஈரானை அமெரிக்கா அழித்துவிடும். ஈரான் என்ற நாடு இந்த பூமியில் இருந்ததற்கான அடையாளம் இல்லாதபடி துடைத்தெறியப்படும். ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசகர்களுக்கு தெளிவான அறிவுறுத்தலை வழங்கியுள்ளேன் – என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
தமிழகத்தில் சிக்கன் குனியா நோய் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்யேக வார்டுகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் […]
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான தகவல்
இன்று காலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்றார். எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் காலை உணவு பரிமாறப்பட்டது. அத்துடன் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டது. அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்று இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், பா.ம.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அ.ம.மு.க.வுக்கு 9 தொகுதிகளும், 1 ராஜ்யசபா இடமும் வழங்க முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், பா.ம.க.வுக்கு 19 […]
தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம், இன்று வியாழக்கிழமை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு…
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த வைரமுத்துவிற்கு அங்கு இருந்த வழக்கறிஞர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் தெரிய வரவில்லை. நல்வாய்ப்பாக செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் தவறி விழுந்தது.இதையடுத்து, வழக்கறிஞர்கள் வைரமுத்துவை உடனடியாக பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கூட்டணியை இறுதி செய்ய அதிமுக பாஜக தீவிரம்
கூட்டணியை இறுதி செய்ய அதிமுகவும் பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இன்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தலைமையில் பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, அப்போது யாருக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டணியில் மற்ற கட்சிகளையும் பேசி முடித்து பிரதமர் சென்னை வரும்போது மேடையில் ஏற்றுவதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சிவகார்த்திகேயன் தத்து எடுத்த வெள்ளை புலி மரணம்.
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி மரணமடைந்தது நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வெள்ளைப்புலி உயிரிழந்தது. இதேபோல பூங்காவில் பரா மரிக்கப்பட்டு வந்த 22 வயதான ரமேஷ் என்ற சிறுத்தை வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர் இருப்பி னும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சிறுத்தை பரிதாபமாக இறந் தது. உயிரிழந்த வெள்ளைப்புலி மற்றும் சிறுத்தையை மீட்ட ஊழியர்கள் பூங்கா வளாகத் […]
புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவித் தொகை ரூபாய் பத்தாயிரத்துடன் ஓராண்டு “டிஜிட்டல் பயிற்சி திட்டம்”
புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவிதொகை ரூ.10 ஆயிரத்துடன் 12 மாதங்களுக் கான கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கான ‘டிஜிட்டல் பயிற்சித் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லட்சமிநாராயணன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையாக திமுக அரசை அகற்றும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். திமுக குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் – பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி.