தங்கம் விலை குறைந்தது.
22 காரட் ஆபரணத் தங்கம்ஒரு கிராம் நேற்று ரூ.10,005 ஆக இருந்த விலை, இன்று ரூ.35 குறைந்து ரூ.9,970 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் (8 கிராம்) நேற்று ரூ.80,040 ஆக இருந்த விலை, இன்று ரூ.280 குறைந்து ரூ.79,760 ஆக விற்பனையாகிறது.
உக்ரைன் தலைநகர் மீது 800 டிரோன் ஏவி ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரைன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் நேற்று நடந்துள்ளது
பாஜக எம்பிக்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் நரேந்திர மோடி
பாஜக எம்பி.க்களின் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை கவனித்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
நாளை சந்திரகிரகணம் :திருப்பதி கோவில் மூடல்
நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.50 மணியில் இருந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரம் முன்பே திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களும் மூடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.அதன்படி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.15 மணியளவில் மூடப்படும். நாளைமறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கோவிலின் நடை திறந்து தூய்மைப்பணி, புண்யவசனம் நடத்தப்படுகிறது. காலை 8 மணியளவில் […]
மோடி சிறந்த பிரதமர் – டிரம்ப் பாராட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது : மோடி சிறந்த பிரதமர். ஆனால் அவர் இப்போது செய்வது தான் பிடிக்கவில்லை . அதற்காத இந்தியா – பாசிஸ்தான் உறவில் மாற்றம் வராது. என்றார்.
தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் – முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க வரி பாதிப்பை ஜி.எஸ். டி. சலுகை சரி செய்யுமா?
பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்காது என நினைக்கிறேன். இந்தியா மீது அதிக வரி விதிப்பது எதிர்பார்த்த பலனை தராது என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது. உள்நாட்டில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதுநாட்டில் நுகர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் ஏற்படும் ஏற்றுமதி இழப்பை, உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான […]
செங்கோட்டையன் பற்றி பேச மறுக்கும் எடப்பாடி
செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இதற்காக பழனிசாமிக்கு கால அவகாசமும் அளிப்பதாக தெரிவித்திருந்தார். இது குறித்து தேனியில் தங்கியிருந்த பழனிசாமியிடம் கேள்வி கேட்க செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அதனைத் தவிர்த்துவிட்டு காரில் அவசரமாக கம்பம் பிரச்சாரத்துக்கு கிளம்பிச் சென்றார். கம்பம் பிரச்சாரத்திலும் செங்கோட்டையன் குறித்த பேச்சு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அங்கும் செங்கோட்டையனைப் பற்றி அவர் எதுவும் […]
எடப்பாடி வேளை மறித்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்
கம்பம் பிரச்சாரத்துக்காக தேனியில் இருந்து பழனிசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது அனுமந்தன்பட்டி அருகே அமமுகவினர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை திடீரென மறித்தனர். அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். போலீஸார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து வாகனங்கள் கிளம்பிச் சென்றன.
சமோசா வாங்கி தராத கணவன் மீது மனைவி குடும்பத்தினர் தாக்குதல்.
உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியில் உள்ள அனந்த்பூரைச் சேர்ந்தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்கீதா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்படி சங்கீதா கூறியுள்ளார். ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்பியுள்ளார். சமோசா எங்கே என மனைவி கேட்டபோது, வாங்க மறந்து விட்டேன் என சிவம் குமார் கூறியுள்ளார். இதனால் இருவர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. மறுநாள் தனது குடும்பத்தினரை வரவழைத்த சங்கீதா, சமோசா […]