பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொலைதூரப் பகுதிக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும். இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

பிட்புல், ராட்வீலர் நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்

சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் – சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம். ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி கண்டறிவது?

தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்களது பெயர் இடம்பெறுமா என்பதை முன்கூட்டியே அதாவது இன்றே அறிந்து கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். மேலும் விவரங்களுக்கு (view details) […]

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு லட்சம் வாக்காளர் நீக்கம்

செங்கல்பட்டு மாவட்​டத்​தில் தாம்​பரம், பல்​லா​வரம், சோழிங்​கநல்​லூர், மது​ராந்​தகம், செய்​யூர், செங்கல்பட்டு, திருப்​போரூர் ஆகிய 7 சட்​டப்​பேரவை தொகுதிகள் உள்ளன. மொத்​த​முள்ள 27,87,362 வாக்​காளர்​களில் 7,01,901 வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. இரட்​டைப் பதிவு, இறந்​தவர்​கள் மற்​றும் இடம்​பெயர்ந்த வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​ட​தால், வாக்​காளர் எண்​ணிக்கை 20,85,464 ஆகக் குறைந்​துள்​ளது. இது மொத்த வாக்​காளர்​களில் 25.18% ஆகும்.

ரீல்ஸ் போடுவதற்காக ரயிலில் குளித்த பயணி

ரயிலில் குளித்த பயணி ஒருவரை ரயில்வே துறை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு ரயிலில் பயணி ஒருவர் கழிப்பறைக்கு அருகில் நின்று வாளி மற்றும் குவளையுடன் சோப் போட்டு குளிப்பது போன்ற வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பலர் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்தனர். மேலும் பலர் அந்தப் பயணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் வீடியோவில் காணப்பட்ட அந்த நபரை அடையாளம் கண்டு அவர் […]

தெலுங்கு படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன்.

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது இந்த படம் தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த “பகவந்த் கேசரி” இந்த படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்ல்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்கு

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், தில்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா(UAPA) சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தில்லி காவல் துறையினர் […]

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய விருது!

நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான ‘நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை’ மத்திய அரசு சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கௌரவம்!

கோவாவில், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள். இந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் விஜய் பொதுக்குழுவில் தீர்மானம்

தமிழக வெற்றி கழக பொதுக்குழு இன்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் கூட்டணி குறித்தும் மற்ற தேர்தல் அணுகுமுறை குறித்தும் முடிவு செய்ய விஜய்க்கு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.