பொங்கலுக்கு 22,797 சிறப்பு பஸ்கள் பேருந்துகளை இயக்க முடிவு

பொங்கலை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக 22 797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .வரும் ஒன்பதாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த பஸ்ஸில் இயக்கப்படும். இதற்காக கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பகுதிகளில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய மகாபலிபுரம் சாலை, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளி சுற்றுச்சாலையை தேர்வு செய்து பயன்படுத்துமாறு அமைச்சர் […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் திமுக ஆட்சிக்கு பின்னடைவு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சரியானது. அறநிலைத்துறை கோவில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் அந்த தீபத்தூண் கோவில் எல்லைக்குள் தான் உள்ளது என்று அதிரடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது என நீதிபதிகள் […]

வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வங்கக் கடலில் வருகின்ற ஜன. 6 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி 2-வது வாரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கோஷ்டி மோதல் – ஜோதிமணி பாய்ச்சல்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளது ஒரு தரப்பு விஜய் கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறது. மற்றொரு தரப்பு திமுக கூட்டணியில் நீடிக்க விரும்புகிறது. இவர் எதிரொலியாக ஆளுக்கு ஒரு கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் ஜோதிமணி எம்பி தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது. காங்கிரஸ் என மக்களவை எம்.பி. ஜோதிமணி X தளத்தில் பதிவிட்டு உள்ளார்.வாக்காளர் விண்ணப்ப படிவங்களை தேர்தல் ஆணையத்திற்கு தர அனுமதி மறுப்பதாக காங்கிரஸ் கட்சி தலைமை மீது […]

டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.74 லட்சம் கோடி: 6% அதிகரிப்பு

நாட்டில் கடந்த டிசம்பரில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.74 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2024, டிசம்பா் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.64 லட்சம் கோடி) இது 6 சதவீத அதிகரிப்பாகும். கடந்த நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடி ஜிஎஸ்டி கிடைக்கப் பெற்ற நிலையில், டிசம்பரில் வருவாய் உயா்ந்துள்ளது.

கூட்டணி முடிவு செய்ய பிரேமலதா ஆலோசனை

சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி திமுக-வுடனா அதிமுக-வுடனா என இறுதி செய்யும் முயற்சியில் தேமுதிக தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் வரும் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

பழைய ஓய்வூதியத் திட்டம் – முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 8-ம் நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாளை முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைகோ நடை பயணத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சியில் இருந்து நடை பயணம் தொடங்குகிறார். சமத்துவ நடை பயணம் என்று அறிவித்துள்ளார் இதன் முக்கிய அம்சமாக போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும். இந்த நடை பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார் அப்போது போதை பொருட்களை ஒழிக்க மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மாதத்தில் வடபழனி -போரூர் மெட்ரோ ரெயில்

சென்னை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரைக்கும் மெட்ரோ ரயில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது . இந்த ரயில் இந்த மாதம் போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போரூரில் இருந்து நேரடியாக வடபழனிக்கும் ரயில் போக்குவரத்தை தொடங்க ஆலோசனை நடந்து வருகிறது .இந்த மாத இறுதியில் இந்த போக்குவரத்து தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் போரூர் முதல் வடபழனி வரை நேரடி போக்குவரத்தையும் பின்னர் ஜூன் மாதம் இடையில் […]

ஷார்ட் வீடியோக்களால் மனநல பாதிப்பா?? புதிய ஆய்வு

சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் […]