நீருக்கடியில் கிறிஸ்மஸ் குடில் – கடல் கன்னியுடன் சாந்தா குரூஸ் நீச்சல்
விஜிபி மரைன் கிங்டம் காட்சியகத்தில் நீருக்கடியில் கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது
உரிமம் இல்லாத நாய்களுக்கு இன்று முதல் அபராதம்
சென்னையில் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க 15 குழுக்கள் நியமனம் செய்யப் பட்டு உள்ளன என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இதில் எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 59 ஆகும். இந்த வழிப்பாதையில் சராசரியாக தினசரி 1,500 முதல் 2,500 வரை பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேநேரத்தில் வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக இதுவரை 64 ஆயிரத்து 776 பக்தர்கள் […]
அனிருத் மீது பாயும் தெலுங்கு இசை அமைப்பாளர்
இசை அமைப்பாளர் தமன் கூறியதாவது `தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை. பணத்திற்காக..’’வேலை செய்கிறார்கள் என்று இசையமைப்பாளர் தமன் கூறினார்
இண்டிகோ விமான ரத்தால் மற்ற விமானங்கள் வசூல் கொள்ளை
மத்திய அரசின் புதிய விதிமுறை காரணமாக விமானிகள் பணிக்கு வராத காரணத்தால் இண்டிகோ விமானம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது இதனால் ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களின் விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், அந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் வரலாறு காணாத அளவுக்கு பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு வழக்கமாக ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானத்தில் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை […]
இந்தியா முழுவதும் ஆயிரம் விமானங்கள் ரத்து
விமானிகள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தினமும் நாடு முழுவதும் 2,200 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், விமானிகளின் பணி நேர வரம்பு (எப்டிடிஎல்) குறித்து கடந்த மாதம் திருத்தப்பட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, விமானிகளுக்கு பணிநேரம், ஓய்வுநேரம் நிர்ணயிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
இன்றே உருவாகிறது புயல்
அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது காவிரி டெல்டா பகுதிகளில் நாளையில் இருந்து 30-ந்தேதி காலை வரையிலும், வருகிற 29-ந்தேதி காலையில் இருந்து அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி வரையில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பதிவாக வாய்ப்பு இருப்பதாகவே ஹேமச்சந்தர் தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் […]
அவசர உதவி எண்கள் மாற்றம்
பொதுவாக, பிரசவ வலி முதல் சாலை விபத்து, மாரடைப்பு போன்ற எந்த மருத்துவ உதவிக்கும், 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ்க்கு அழைப்போம். ஆனால், அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன * 102 கர்ப்பிணி & பச்சிளம் குழந்தைகளின் உதவிகளுக்கு *1073 சாலை விபத்துகளுக்கு 104-இலவச மருத்துவ உதவிகளுக்கு. மற்ற உதவிகளுக்கு 108′ என்ற எண்ணில் அழைக்கலாம்.
தமிழகத்தில் நாளை கனமழை
தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று (நவ.27) வடமேற்காக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வலுப்பெற்று, அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், நாளை (நவ.28) கடலோர தமிழகத்தில் […]
2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்தியா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2030ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் கூட்டமைப்பு இந்த ஒப்புதலை அளித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவின் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் 20 ஆண்டுகள் கழித்து 2030ம் ஆண்டு மீண்டும் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்த அனுமதி கிடைத்துள்ளது. முன்னதாக, 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.