திருச்செந்தூர் கோவிலுக்குள் ஓட்டு கேட்ட விஜய் ரசிகர்கள்
திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் “தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், “அடுத்த வருடம் அறநிலையத் துறையைடேக்-ஓவர் செய்து, பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை’’ எனக்கூறி விஜய்யின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்கு சேகரித்தனர்.
முஸ்லிம் பெண்ணை காதலித்து மணக்கும் பிரியங்கா மகன்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா – ராபர்ட் வதேரா தம்பதிக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழி முஸ்லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அவிவாவின் தந்தை இம்ரான் தொழிலதிபர், தாய் நந்திதா பெய்க் பிரபல டிசைனராக பணிபுரிகிறார்.பிரியங்கா மகன் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறுகிறது.
சபரிமலை மகர ஜோதிக்கு 35,000 பக்தர்கள் மட்டுமே அனுமதி!
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மகர ஜோதி அன்று 35,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
காங்கிரஸ் மேலிடத்திற்கு பா சிதம்பரம் கண்டிப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் பா சிதம்பரம் கூறியதாவது:-தமிழ்நாட்டில் நிச்சயமாக திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம். மற்ற மாநிலங்களை பற்றி கவலைப்படுங்கள். வீணாக தமிழகத்தில் டெல்லி தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என,நான் காங்கிரஸ் தலைவரிடம் கூறிவிட்டேன் என்றார்.
யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? – விஜய் கேள்வி
சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியம். இளைஞர்களுக்கு எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? இவ்வாறு தவேக தலைவர் விஜய் கேள்விகளை எழுப்பினர்.
தங்கம் விலை மேலும் குறைந்தது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரம் சிவன் பார்த்துக் கொள்வார். மத்திய அமைச்சர் பேட்டி
திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இவ்வாறு அவர் கூறினார்
புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
1) காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். 2) அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. 3) மெரினா கடற்கரை உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து மூடப்படும். வாகனங்கள் நிறுத்த […]
பான் கார்டு – ஆதார் இணைப்பு இன்றே கடைசி நாள்
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்து உள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டும். இணைக்கத் தவறினால் PAN எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் என வருமான வரித் துறை எச்சரிக்கை.எடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் மோதல்.வி.சி.க. கம்யூனிஸ்டுமீது காங்கிரஸ் பாய்ச்சல்
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரின் பதிவு வருமாறு:- “VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றிய செய்தி படித்தேன், இதுஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை […]