எலும்புகளை வலுவாக்கும் சாத்துக்குடி ஜூஸ்..!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சத்திக்குடி சாறு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்ச்சி பெறும்.சொட்டு சொட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் சாத்துக்குடி பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவது வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய மிகவும் நன்மை பயக்கும். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து […]
பூசணி விதையில் உள்ள மருத்துவ குணம்

பூசணி விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துகளையும், மருத்துவ குணத்தையும் கொண்டவை. ஆனால் பெரும்பாலும் இவை உணவில் பயன்படுத்தப்படுவதில்லை. பூசணி விதையின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.பூசணி விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின் இ நிறைவாக உள்ளது. பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் அன்றாடம் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.பூசணி விதையில் உள்ள மக்னீசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது. பூசணி விதைகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. […]
கண்ணாடி வளையல்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன. அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.அந்த வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வையையும்(திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது. கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள் அவசியம் என கூற காரணம் என்னவென்றால், நிறைமாத பெண்மணி மெல்ல […]
சித்தரத்தையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

சித்தரத்தை பயன்கள்… இஞ்சி குடும்பத்தைச் சார்ந்ததுதான் சித்தரத்தை ஆகும். இது கிழக்காசிய நாடுகளில் “சீன இஞ்சி” என்று அழைக்கப் படுகின்றது. சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. சித்தரத்தை, பேரரத்தை என்பதாகும். இந்தியாவில் இவை பயிரிடப்படுகின்றன. இதன் வேர் பல மருத்துவ குணங்கள் கொண்டது.ஆஸ்துமா, இளைப்பு, இருமல், சளி போன்றவற்றை குணப்படுத்தும். மூச்சடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு இவை அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துப் பொடியாக்கி அதை தேனில் கலந்து சாப்பிட்டு […]
பாஸ்பரஸ், கால்சியம் சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு அளிக்கும் நன்மை

சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E வைட்டமின் B6 மற்றும் போலேட் (folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது.சேப்பங் கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலுவை சேர்க்கும். சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய […]
செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம் குறைகிறது

செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் கார்டிசோல் எனும் தீங்கு விளைவிக்கும் ஹார்மோன் குறைந்து, ஆக்சிடோசின் எனும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது ரத்தத்தில் கொலஸ்டிரால் மற்றும் டிரை கிளிசரைடு அளவுகளைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.செல்லப்பிராணியை பராமரிப்பதும், குழந்தையைப் பராமரிப்பதும் கிட்டத்தட்ட ஒன்றாகும். செல்லப்பிராணியை வளர்க்கும் நபர்களுக்கு […]
தினமும் காலையில் ஒரு கையளவு ஊற வைத்த கருப்பு சுண்டலை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?

ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்த வேலையையும் சுறுசுறுப்பாகவும் திறம்படவும் செய்ய முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் சத்தான உணவுகளைத் உண்ணும் போது, அந்த உணவுகளில் உள்ள சத்துக்களை உடல் முழுவதுமாக உறிஞ்சும். எனவே தான் காலை உணவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அதுவும் ஒருசில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. […]
மருத்துவக் குறிப்பு

பால் சேர்க்காமல் டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் தொண்டை வலி நீங்கும்.
மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவது நல்லதா?

மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இதில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெயில், நிறைவுற்ற கொழுப்பு – 21 கிராம், நிறைவுறதாக கொழுப்பு 16 கிராம் உள்ளன. நம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால், இதயத்திற்கு பெரும் பாதிப்பை […]
வயிற்று உபாதைகளை குணமாக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நன்றாகப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார்த்துள்ளோம்.வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரழிவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது.கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் […]