அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி!

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதி நேற்று இரவு பரப்புரை மேற்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த ராமதாஸ், சேலத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கோடை வந்தாச்சு… நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காயை சாப்பிடுங்க..!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க டீ, காபி பிரியர்கள் கூட, இப்போது இளநீர், ஜூஸ், தர்பூ சணி, வெள்ளரிக்காய் பக்கம் திரும்பிவிட்டனர். இதில், நீர்ச்சத்து மிக்க வெள்ளரிக் காயை பற்றி அறிந்துகொள் வோம். கோடையில் நீர்ச்சத்து நிரம்பிய உணவு பொருட்களை உட்கொள்ள விரும்புபவர் களுக்கு வெள்ளரிக்காய் சிறந்த தேர்வாக அமையும். வெள்ளரிக் காயில் பல வகைகள் உள்ளன. இருப்பினும் பாம்பு போன்று நீளமாக காட்சியளிக்கும் ‘ஸ்னேக் குக்கும்பர்’ எனப்படும் சுருள் வெள்ளரிக்காய்தான் […]

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும். 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.

இரவில் 2 நிமிடம் பல் துலக்குவதால் இதயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்

இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்கும் இரண்டு நிமிட எளிய பழக்கம், உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது டோஹோகு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாம் இரவு பல் துலக்காமல் உறங்கும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் பன்மடங்கு பெருகி வீக்கங்களை (inflammation) உண்டாக்குகின்றன; இந்த வீக்கங்கள் இதய நோய்களுடன் நேரடித் தொடர்புடையவை என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பகல் முழுவதும் வாயில் தேங்கியுள்ள பாக்டீரியாக்களை இரவு நேரப் பல் துலக்குதல் அகற்றுவதால், […]

பறவைக்காய்ச்சல் பரவல்: ஹாஃப் பாயில் சாப்பிடலாமா? – அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னையில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்தத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக்காய்ச்சல் தாக்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது. பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் […]

சென்னையில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை:- தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

சென்னையிலும், பல சுற்றுப்புறங்களிலும் சமீப நாட்களில் 1,500 காகங்கள் இறந்து கிடந்ததை அடுத்து, ஆய்வக சோதனைகளில் H5N1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது , இது இப்பகுதியில் பறவை காய்ச்சல் பரவுவதைக் குறிக்கிறது. பறவைக் காய்ச்சல் பீதியைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு மத்திய அரசு, தமிழக அரசு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. IANS அறிக்கையின்படி, அடையாறு, காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை […]

காகங்கள் உயிரிழப்பு – வைரஸ் தொற்று உறுதி.

சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றில் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும், இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம் என கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இந்தியாவில் நிபா வைரஸ்”

இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பயணக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “புதிதாக யாருக்கும் நிபா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை, இந்தியாவில் நிபா பரவல் குறித்து கண்காணித்து வருகிறோம்” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தெரு நாய் கடித்ததால் சிறுவன் உயிரிழப்பு..‌

காஞ்சிபுரம் அருகே சின்னிவாக்கம் கிராமத்தில் நண்பர்களுடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சிகிச்சைக்கு பயந்து பெற்றோரிடம் நாய் கடிதத்தை மறுத்தால் ரேபிஸ் நோய் முற்றி உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன் (15) என்ற சிறுவன் அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு […]

தமிழகத்தில் சிக்கன் குனியா நோய் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசியில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. எலிசா பரிசோதனைகளை மேற்கொள் தேவையான உபகரணங்களை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.. மருத்துவமனைகளில் டெங்கு, சிக்குன்குனியாவுக்கு என பிரத்யேக வார்டுகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ விரைவு குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் […]