சபரிமலை மீண்டும் திறப்பு எப்போது?
சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று இரவு 11 மணி வரையே பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். நாளை காலை பந்தளராஜ வம்ச பிரதிநிதியின் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு காலை 6.30 மணிக்கு நடைசாத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகரஜோதி வழிபாடுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. பின்பு, கும்பம் மாத (மாசி) வழிபாட்டுக்காக பிப்.12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும்.
தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வாகனங்கள் படையெடுத்ததால், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதவிர சிங்கப்பெருமாள்கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் ஓஎம்ஆர், ஈசிஆரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை வரை செங்கல்பட்டு மாவட்ட மற்றும் சென்னை மாநகர போலீஸார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
தங்கம் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.170 உயர்ந்து, ரூ.13,450க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கு விற்பனையாகி வருகிறது.
அஜித் குமார் உடன் கார் பந்தயத்தில் செல்ல கட்டணம்
துபாயில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது இதில் அஜித் குமார் ரேசிங் அணி தொடர்ந்து பங்கேற்று வருகிறது. வரும் 25ஆம் தேதி துபாய் ஆட்டோடிரோமில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் போது அஜித்குமார் ஓட்டும் காரில் அவருடன் செல்வதற்கு 86 ஆயிரத்து 475 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை கட்டி காரில் அவருடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டள்ளது.
நடிகர் விஜய் இடம் சி.பி.ஐ அதிரடி கேள்வி
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக மீண்டும் டெல்லிக்கு போய் உள்ளார்.இன்று அவரிடம் இரண்டாவது கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசும் போதே நெரிசல் ஏற்பட்டது உங்களுக்கு தெரியாதா? என்பது உட்பட பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனர் .வழி நெடுக அலங்கார வளைவுகள் இருந்ததால் கூட்டத்துக்கு வர தாமதம் ஆனதாக விஜய் கூறினார். இது தொடர்பான ஆதாரங்களை உடனே காட்டும் படி சி.பி.ஐ உத்தரவிட்டது.
ஜல்லிக்கட்டை குடும்ப விழா ஆக்குவதா ?-அதிமுக கண்டனம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மரபுபடி காலை 7 மணிக்கு தெடாங்காமல் துணை முதல்வர் உதயநிதிக்காக ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தி, போட்டியை காண வந்த மக்களையும், போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளைகள், அதன் உரிமையாளர்களை வேதனைப்படுத்தலாமா? என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்டாலினுக்காகவும் உதயநிதிக்காகவும் நடத்துவது போல் குடும்ப விழா ஆக்குவதா என்று அவர் கேள்வி கொடுத்தார்
எடப்பாடி டெல்லி பயணம்
பாமக உடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை அவர் பாஜக தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு முடிவாகும் என்று தெரிகிறது.
தங்கம் சவரனுக்கு ரூ.320, வெள்ளி ரூ.12,000 உயர்வு
தங்கம்ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரும்.
அதிமுக – பாமக கூட்டணி உறுதி! எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தற்பொழுது பாமகவும் கூட்டணியில் இணைந்து உள்ளது. இது இயற்கையாக அமைந்துள்ள கூட்டணி. மேலும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்து விட்டோம். இதற்கான அறிவிப்பை பின்னர் அறிவிக்கிறோம் என்று கூறினார். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைய உள்ளது. எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பத்தின்படி இந்த கூட்டணியை அமைத்து உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் […]