திமுகவில் இணையும் முடிவில் இருந்து பின்வாங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமச்சந்திரன்

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரன் நேற்று வைத்தியலிங்கத்தை பின்பற்றி திமுகவில் சேர முடிவு செய்திருந்தார். அவரது வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது திமுகவில் சேர்ந்தால் ஜெயலலிதா படத்தை நீக்கிவிடுவீர்களா என்று அவரது மகள் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் சேரும் முடிவை கைவிட்டார் அதே சமயம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

வளர்ப்பு நாய்க்கு துலாபாரம் கொடுத்த தெலுங்கு நடிகை!

தனது வளர்ப்பு நாய்க்குத் ‘துலாபாரம்’ (வெல்லம்/தங்கம்) வழங்கிய விவகாரம் தொடர்பாக, தெலுங்கு நடிகை டீனா ஸ்ராவ்யா பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். தனது நாய் உடல்நலக் குறைவிலிருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக வேண்டியிருந்ததாகவும், அந்த பக்தியினால் தான் அவ்வாறு செய்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தையோ அல்லது சடங்குகளையோ கொச்சைப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், இந்தச் செயலால் பக்தர்கள் யாராவது மனவேதனை அடைந்திருந்தால் மன்னிக்கும்படியும் அவர் ஒரு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பொதுச்சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம், இன்று வியாழக்கிழமை ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக தவெக தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, விசில் மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகிய 3 சின்னங்களை கோரி தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. தற்போது விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவித் தொகை ரூபாய் பத்தாயிரத்துடன் ஓராண்டு “டிஜிட்டல் பயிற்சி திட்டம்”

புதுச்சேரியில் முதன்முறையாக மாத உதவிதொகை ரூ.10 ஆயிரத்துடன் 12 மாதங்களுக் கான கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கான ‘டிஜிட்டல் பயிற்சித் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதனை பொதுப்பணி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லட்சமிநாராயணன் தொடங்கி வைத்தார்.

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது – உச்ச நீதிமன்றம் வேதனை

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது; அதில் தலையிட்டு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. பரப்புரைக் கூட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.

4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம்..! நாடு முழுவதும் வரும் 27ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு. கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தால் நாள்தோறும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணி செய்வதாகவும் ஒப்புதல். வரும் 24ஆம் தேதி 4வது சனிக்கிழமை, 25ஆம் தேதி ஞாயிறு, 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறை, அதற்கு அடுத்த நாளான 27இல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ. 4,120 உயர்ந்துள்ளது.இன்று(ஜன. 21) காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14,000 – க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு இன்று பிற்பகலில் கிராமுக்கு ரூ. 515 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,415-க்கும் சவரனுக்கு ரூ. 1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15,320 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், வெள்ளி […]

புதிய உச்சத்தில் தங்கம் விலை! சவரனுக்கு ரூ. 2,800 உயர்வு!!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ரூ. 2,800 அதிகரித்துள்ளது.தொடர்ந்து இன்று(ஜன. 21, புதன்கிழமை) காலை 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 350 உயர்ந்து ரூ. 14,250 -க்கு விற்பனையாகிறது.அதேபோல வெள்ளி விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ. 340-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,40,000 […]

தாம்பரம் அருகே லாரி இருசக்கர வாகன மோதல் – 3 பேர் பலி…

தாம்பரம்:- பல்லாவரத்தில் இருந்து, ஜல்லி ஏற்றி வந்த லாரி, ஈச்சங்காடு சந்திப்பில், கீழ்க்கட்டளை நோக்கி செல்ல, இடப்புறமாக திரும்பியது. அப்போது, கீழ்கட்டளையில் இருந்து, கோவிலம்பாக்கம் நோக்கி செல்ல, எதிர் திசையில் வந்த, இருசக்கர வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கோகுல்ராஜ், தனாய் மண்டேல் இருவரின் மீதும், லாரியின் சக்கரம் ஏரி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலானாய்வு பிரிவு […]