மீண்டும் சிக்கலில் ’ஜனநாயகன்’ – தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு

‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது. பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் […]

“மங்காத்தா” அலையால்… – மோகன் ஜி வேதனை

திரௌபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் படம் பார்க்காமல் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். திரைப்படத் துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன். மக்களின் தீர்ப்பே மகேசன் […]

ஜனநாயகன் திரைப்படம் தீர்ப்பு ஒத்திவைப்பு.

’ஜனநாயகன்’ பட சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

கரூர் சம்பவம் – விஜய்க்கு சிபிஐ சம்மன்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் நெரிசலின் சிக்கி 41 பேர் பலியானார்கள் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.ஏற்கனவே டெல்லியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கில் நடிகர் விஜய் விசாரிக்கப்படுகிறார். இதற்காக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது

ஜனநாயகம் ரீமேக் படமா?

ஜனநாயகன்’ ரீமேக் என்று பரவி வரும் தகவல்களுக்கு ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிப்புடி விளக்கமளித்துள்ளார். ‘பகவந்த் கேசரி’ தமிழ் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக ‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “’ஜனநாயகன்’ விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். என்றார்

நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத் தேதி

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது

ரஜினி புத்தாண்டு வாழ்த்து

“நான் எப்பவுமே போற ரூட்டை பத்தி கவலை பட்டதே கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டுட்டு வண்டி எந்த ரூட்ல போகுதோ.. அந்த ரூட்ல, ‘சிவா’-ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..!” ‘முத்து’ திரைப்படக் காட்சியை பதிவிட்டு 2026 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

திருச்செந்தூர் கோவிலுக்குள் ஓட்டு கேட்ட விஜய் ரசிகர்கள்

திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் “தளபதி விஜய்க்கு அரோகரா.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா” என தவெக தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், “அடுத்த வருடம் அறநிலையத் துறையைடேக்-ஓவர் செய்து, பாஸ் வழங்குவோம். இந்த மாதிரி வரிசையில் நிற்க அவசியமில்லை’’ எனக்கூறி விஜய்யின் போட்டோவை காட்டி பக்தர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? – விஜய் கேள்வி

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியம். இளைஞர்களுக்கு எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? இவ்வாறு தவேக தலைவர் விஜய் கேள்விகளை எழுப்பினர்.

ஒரு ஆயிரம் கோடி வசூலை எட்டும் மாதவன் படம்

இந்தியாவில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் நடித்த ‘துரந்தர்’, வசூலில் முதலிடத்தில் இருந்த ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தை முந்தியிருக்கிறது. ‘துரந்தர்’ இந்தியாவில் ரூ.600 கோடியும் உலகம் முழுவதும் இப்போது வரை ரூ.925 கோடியையும் வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.