குரோம்பேட்டை வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன ஹோமம்

குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் சார்பாக வசந்த மண்டபத்தில் 13 ஆம் ஆண்டு ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 5 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும் 9 மணிக்கு சங்கல்பம் 10மணிக்கு அனுக்ஷை புண்ணியாக வாசகம் கும்ப பூஜை 11:30 மணிக்கு ஹோமங்கள் 12 30 மணிக்கு பூர்ணாஹுதி நடைபெற்று ஒரு மணிக்கு மகா தீபாரணை செய்யப்பட்டு பக்தகோடிகளுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டு […]
குரோம்பேட்டை குமரன்குன்றம் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பவித்ரா கேட்டரிங் சார்பில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 96771 97751 (புகைப்படம்: விசு)
அஸ்தினாபுரம் இறைச்சி கடையால் சுகாதார சீர்கேடு

குரோம்பேட்டை அஸ்தினாபுரம் இறைச்சி கடை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது..தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தினாபுரம், வார்டு 38, டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் த மீட் சாப் என்ற பெயரில் இறைச்சி கடை அமைந்து உள்ளது.இந்த கடையை மதியம் மூன்று மணிக்கு அடைக்கிறார்கள், அப்பொழுது கடையில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியில் வைத்துவிட்டு செல்கிறார்கள்.இரவு குப்பை வண்டி வந்து தான் கழிவுகளை எடுக்கிறார்கள் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தப் பகுதியில் நடந்து செல்லவோ நிற்கவோ […]
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட LED வண்ண மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மணடலகுழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குரோம்பேட்டை செல்போன், துணிக்கடையில் ரூ.24 லட்சம் அதிரடி கொள்ளை

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் செல்போன் கடை, துணிக்கடையில் பின்பக்கம் துளையிட்டு 24 லட்சம் மதிப்புள்ள செல்போன், துணிகள் கொள்ளை சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்னை மொபைல் பிளாசா எனும் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடையை நடத்திவந்தவர் தமிம் அன்சாரி, நேற்று வழக்கம்போல் கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை கடையை திறக்க முயன்றபோது கடையின் பின்பக்கம் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 20 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன்கள் கொள்ளை போனது […]
குரோம்பேட்டை எம் ஐ டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவு சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு இன்று மாலை 5 மணிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்துகல்லூரி நிர்வாகம் 7 மணியளவில் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் இரண்டு வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். […]
15 ஆண்டாக நீடிக்கும் ராதாநகர் சுரங்கபாதை பணி

குரோம்பேட்டை ராதா நகரில் 2 மற்றும் 3 வது மண்டல குடியிருப்போர் நல வாழ்வு சங்கங்களின் இணைப்பு மையம் சார்பில் ராதா நகரில் தெருமுனை கூட்டம் நடந்தது.செயலாளர் முருகையன் பொருளாளர் அரசி, நாசே சீனிவாசன், வியாபாரிகள் சங்கம் பி.ராம கிருஷ்ணன், குரோம் பேட்டை நாசர், பி.பழனி மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.அப்போது வைஷ்ணவா கல்லூரி அருகே கனரக வாகனங்கள் செல்லும் வகையில் இருவழி சுரங்க பாதை அமைக்க மீண்டும் வலியுறுத்தப்பட்டது.சாலைகளில் ஆடு, மாடுகள் […]
குரோம்பேட்டை சுடுகாட்டில் பயங்கர தீ விபத்து சவ ஊர்தி எரிந்தது

குரோம்பேட்டை எரிவாயு தகன மேடை அருகே தீ விபத்து தீ கொழுந்து விட்டு எரிந்ததால் மின்சார கேபிள்கள் எரிந்து அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிப்பு, பழை சவ ஊர்தி ஒன்றும் தீயில் எரிந்தது. உடல் தகனம் செய்ய வந்த பொழுது பூஜை செய்வதற்காக கற்பூரம் கொளுத்திய போது தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் தாம்பரம் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு
சென்னை குரோம்பேட்டையில் ஜிஎஸ்டி சாலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திடீரென திரண்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டடனர். இதனால் குரோம்பேட்டையில் இருந்து […]
வைஷ்ணவா கல்லூரி சுரங்கபாதை விரைவில் அமைக்க கோரி நலச்சங்கத்தினர், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் குடியிருப்போர் நலசங்கத்தினர், வியாபாரிகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் தீடீர் சாலை மறியல், வைஷ்ணவா கல்லூரி ரெயில்வே கேட்டில் நாள்தோரும் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்காக திட்டமிடப்பட்ட அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சுரங்கபாதை விரைவில் அமைக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை குரோம்பேட்டை வைணவா கல்லூரி ரெயில்வே கேட்டை கடந்து ராதாநகர், நெமிலிச்சேரி, உள்ளிட்ட 2 லட்சம் பேர் பயன் படுத்தும் நிலையில் நாள்தோரும் ரெயில் […]