குரோம்பேட்டை நடேசன் நகரில் காணாமல் போன மழை நீர் கால்வாய்

குரோம்பேட்டை நடேசன் நகர் தாலுகா ஆபிஸ் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மழை நீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 23, நடேசன் நகர் பகுதி.இங்கு இருந்த மழைநீர்கால்வாய் கடந்த 10 ஆண்டாக மறைந்து விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு துயரங்களை அனுபவிக்கிறார்கள்.அப்பகுதி நலச்சங்கம், இணைப்புமையம் எடுத்த எந்த முயற்சிக்கும் மாநகராட்சி சார்பில் முறையான நடவடிக்கை இல்லை..அதிகாரிகள் வந்து பார்ப்பதும், நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்வதும் தொடர் நிகழ்வாக […]
குரோம்பேட்டை ராதா நகர் ஸ்ரீ ராம சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

குரோம்பேட்டை ராதா நகர் அனுமார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காலை 10 மணி அளவில் வேத விற்பனர்களும் பட்டாச்சாரியார்களும் விமான கோபுரங்களுக்கு கலச புனித நீர் ஊற்றப்பட்டு ஆலயத்தில் அமைந்திருக்கும் பரிவார மூர்த்தி களுக்கும் புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாதாரனை செய்தனர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்திலிருந்து திறனான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் […]
சிட்லபாக்கத்தில் 20000 விநாயகர் சிலை கண்காட்சி

குரோம்பேட்டையை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் 17 ஆண்டாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் கணேஷ் மகாலில் அரை அங்குலம் முதல் ஆறு அடிவரையிலான, விநாயர்கர் சிலைகள், மண் சிற்பங்கள், தங்கம், வெள்ளி, பவளம், பல்வேறு அறிய படங்கள் என 20 ஆயிரம் விநாயகர்களை கண்காட்சியாக மூன்று அடுக்கு கட்டிடன் முழுவதும் காட்சி படுத்தியுள்ளார். இந்த […]
தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தாம்பரம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி […]
தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் | மாநகராட்சியில் திமுகவினர் மரியாதை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் தாம்பரம் மாநகராட்சி திமுக துணை செயலாளர் பொன் சதாசிவம்,மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகளும் உடன் இருந்தனர் ..
தாம்பரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக சென்று மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்பு தாம்பரம் […]
தாம்பரத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு ..

தாம்பரம் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 34 ஆவது வார்டு SBI காலனி பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 40 ஆவது வார்டு செம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 42 ஆவது வார்டு ராஜகீழ்ப்பக்கம் மாருதி நகர் பகுதியில் ரூ .10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை ஆகிய இம்மூன்று கடைகளும் ,தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி […]
தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை வங்கி சுவர் இடிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு …

தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றினால் வங்கி சுவர் இடிந்து செக்யூரிட்டி மீது விழுந்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்து குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (64) சிட்லப்பாக்கம் ராகவேந்திரா தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார், நேற்று இரவு வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் […]
குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்..

குரோம்பேட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மேடை விழா நடத்த முன்னாள் பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் ஜெயபிரகாஷ் ஏற்பாடு செய்துள்ளார், அந்த தகவல் அறிந்த தற்போது புதிய பகுதி நிர்வாகியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ் அவரின் ஆதரவாளர்களுடன் அங்கு வந்த ஏற்பாடுகளை தடுத்துள்ளனர், இதனால் இருதரப்பிலும் வாய் தகராறு ஏற்பட்டு, அதனை தொடந்து இரு கோஷ்டியாக நடு சாலையிலேயே மோதிக்கொண்டனர், இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் தடுத்து அவர்களை களைத்தனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி […]
ஆசிரியர் தினத்தையொட்டி மக்கள் விழிப்புணர்வு சங்கம்

ஆசிரியர் தினத்தையொட்டி மக்கள் விழிப்புணர்வு சங்கம் குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஐயா சாமி ஐயர் பள்ளியில் 35 ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினர். இந்த விழாவிற்கு சமூகசேவகர் வி.சந்தானம் தலைமை தாங்கினார். சி.ஆர்.நரசிம்மன், மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மீனாட்சி சுந்தரம், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினர். சமூக ஆர்வலர் ரங்காச்சாரி பள்ளிக்குத் தேவையான எல்.இ.டி.பல்புகள் பள்ளியின் தாளாளர் மனோகரிடம் வழங்கினார். மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.