மாணவர்களை ஈடுபடுத்துவதே ‘நிகர பூஜ்ஜிய உமிழ்வு நாடு’ என்பதை அடைவதற்கான சிறந்த வழி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிரீன் டெர்ரே அறக்கட்டளையுடன் இணைந்து கார்பன் நடுநிலைமைக்கான நடவடிக்கைகளுக்கான வரைபடத்தை வரைவதற்காக U75: Net Zero University Campus Regional Workshop ஐ நடத்தியது. கார்பன்-நியூட்ரல் வளாகங்களை உருவாக்க தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் உயர் கல்வி நிறுவனங்களை சித்தப்படுத்துவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை […]

எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் ஆருஷ் 23-தேசிய அளவிலான 4 நாள் தொழில்நுட்ப திருவிழா-90,000 மாணவர்கள் பங்கேற்பு

நிறைவு விழாவில் நாட்டின் முன்னணி உணவு விஞ்ஞானி கே. ராஜகோபால் ‘பிரதிபலித்தல்’ என்ற ஆண்டு இதழை வெளியிட்டார் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST) சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற, தேசிய அளவிலான கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST SRM Insititute of […]

சுவர் இடிந்து விழுந்து பல்லாவரத்தில் பெண் பலி.

ஜமீன் பல்லாவரம் பாரதி நகரை சேர்ந்தவர் சத்தியவாணி (55) வீட்டு வேலை செய்து வந்தார் இவருடைய கணவர் கண்ணியப்பன் கூலி வேலை செய்து வருகிறார், நேற்று இரவு சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் குளிச்சியான சூழல் நிலவியது இதனால் சத்தியவாணி கீழ் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக கூறிவிட்டு மொட்ட மாடியில் தூங்குவதற்கு சென்றுள்ளார், இன்று அதிகாலை அருகே சரவணன் என்பவரின் வீட்டின் சுற்று சுவர் சத்தியவாணி தூங்கி கொண்டிருந்த வீட்டின் சுற்று சுவர் மீது […]

குரோம்பேட்டையில் சாக்கடையில் மிதக்கும் நடேசன் நகர் | டெங்கு பரவும் அபாயம்

குரோம்பேட்டை நடேசன் நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .இந்த பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டது. தற்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மற்றும் பல இடங்களில் உள்ள கழிவுநீரும் சாக்கடை நீரும் கலந்து தெருக்களில் ஓடுகிறது.தாம்பரத்தில் மழை பெய்த போது கூட மற்ற பகுதிகளில் மழை நீர் உடனடியாக வடிந்துவிட்டது. ஆனால் இந்த பகுதியில் மழை நீர் கால்வாய் காணாமல் போய்விட்டதால் தெருக்களில் தண்ணீர் தேங்கி […]

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மல்லிகா நகர் பிரதான சாலையில் நீண்ட நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு தற்போது வரை அதை மூடப்படாமல் இருக்கின்றது

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் பகுதியில் மல்லிகா நகர் பிரதான சாலையில் நீண்ட நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு தற்போது வரை அதை மூடப்படாமல் இருக்கின்றது பிரதான சாலை என்பதால் பள்ளி பேருந்துகள் பள்ளிக்கு செல்பவர்கள் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள் இந்த பள்ளத்தை மூடி கொடுத்தால் நன்றாக இருக்கும் அங்கு செல்பவர்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கின்றனர்..

நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நிறுத்தம்…

நாடாளுமன்ற குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் / கழக பொருளாளர் அண்ணன் திரு.T.R.பாலு B.sc. M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.S.R.ராஜா.M.L.A., ஆகியோர் வைத்த கோரிக்கை மற்றும் தொடர் முயர்சியின் காரணமாக நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற வந்தே பாரத் ரயில், தாம்பரத்தில் நின்ற போது, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அண்ணன் திரு.தொல்.திருமாவளவன்.M.P., அவர்கள், தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் […]

ராதா நகர் சுரங்கப்பாதை.. விரைந்து முடிக்க திமுக எம்எல்ஏ கோரிக்கை

2010 ம் ஆண்டு துவங்கிய ராதாநகர் ரெயில்வே சுரங்கபாதை பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டப்பட்டது. 2லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடையும் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் ரெயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காகவும், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலை குறைக்கும் விதமாக டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்திட வேண்டும் […]

விநாயகர் ஓவியம்

குரோம்பேட்டை நெமிலிச்சேரில் வசிக்கும் கண்ணியப்பன் வரைந்த விநாயகர் ஓவியத்தை செந்தில் விநாயகர் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். இதைபோல பல பிரபலங்கள் படங்களை வரைந்து அவர்களின் பாராட்டை பெற்றார்.

குரோம்பேட்டை ஸ்ரீ சரணாகதி சேவா டிரஸ்ட் மற்றும் மக்கள் விழிப்புணர்வு சங்கம்

குரோம்பேட்டை ஸ்ரீ சரணாகதி சேவா டிரஸ்ட் மற்றும் மக்கள் விழிப்புணர்வு சங்கம் இணைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தேவையான சேர்கள் ‘ஸ்டுல் நன்கொடையாக வழங்கப்பட்டது. இவைகளை துணை தலைமை மருத்துவர் டாக்டர் காமேஷ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் வி.சந்தானம் தலைமையேற்று நடத்தினார்.

படத்திறப்பு விழா

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் பக்தஜன சபையின் முன்னாள் தலைவர் தெய்வத்திரு டி.என்.குருநாதன் அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழா 10/9/2023 ஞாயிறு மாலை 6 மணி அளவில் சபையின் அன்னதான கூடத்தில் நடைபெற்றது. சபையின் மூத்த உறுப்பினர் ஆர்.லட்சுமணன் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் கே.ரமேஷ், ஜி.எஸ்.டி ரோடு நியூஸ் ஆசிரியர் கி.முருகானந்த ஆதித்தன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். சபையின் நிர்வாகிகள் ஆர்.வரதகவுண்டர், ஆர்.சத்தியசேகரன், சி.எஸ்.முரளி மனோகரன், கே.தியாகராஜன், எச்.கார்த்திகேயன் பி.பாலச்சந்தர் மற்றும் நகர் […]