திருவள்ளூர் மாவட்ட தவெ.க. நிர்வாகி தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பதவி விவகாரத்தில் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியில் வரலாறு காணாத கூட்டம்…!!!

திருப்பதியில் அளவு கடந்த கூட்டம் காரணமாக நீண்ட கியூ வரிசையில் பக்தர்கள் புதிதாக நிற்பதற்கு நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. கூட்டத்தின் அளவை பொறுத்து நாளை காலை 6 மணிக்கு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுபவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை படி வரிசையில் கடைசியாக நிற்கும் நபர் 30 மணி நேரம் கழித்து தான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு, புத்தாண்டு […]

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் ஜி.கே.மணி தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், அவரிடம் […]

எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அவரது இல்லத்திற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் வந்ததால் பரபரப்பு. விஜயகாந்த் குருபூஜைக்கு அழைப்பு விடுக்க விடுக்க தான் வந்தோம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறினார்.

இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம்.

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்வோர், இனி கட்டாயமாக உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என்ற தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இடியாப்பம் விற்பனைக்கு தேவையான உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், அந்த உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இடியாப்பம் தயாரிக்கும் போது சுத்தமான சூழலில், தரமான பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக தயாரிக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு உணவு […]

சென்னை : 502 ஆண்டுகள் பழமையான புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனை

ஏழை எளியேரை நேசிக்கவே இயேசு பிரான் மண்ணில் அவதரித்தார். தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் அமைதி நிலவி சகோதரத்துவம் பெருக, அருட்தந்தை ஏ.டி.மைக்கல் சிறப்பு பிராத்தனை செய்தனர். 502 ஆண்டுகள் பழமையான சென்னை புனித தோமையார் மலை தேசிய பசிலிக்கா தேவாலையத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு திருப்பலில் அருட்தந்தை ஏ.டி.மைக்கல் தலைமையில் நடைபெற்றது, ஆலைய வளாகம் முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இயேசு பிறப்பை எல்.ஈ.டி திரையில் ஏ.ஐ தொழில்நுட்ப உதவியால் விடியோ காட்சி திரையிட்டுட்டு […]