வைகோ நடை பயணத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சியில் இருந்து நடை பயணம் தொடங்குகிறார். சமத்துவ நடை பயணம் என்று அறிவித்துள்ளார் இதன் முக்கிய அம்சமாக போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும். இந்த நடை பயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார் அப்போது போதை பொருட்களை ஒழிக்க மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மாதத்தில் வடபழனி -போரூர் மெட்ரோ ரெயில்

சென்னை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரைக்கும் மெட்ரோ ரயில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. இதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது . இந்த ரயில் இந்த மாதம் போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போரூரில் இருந்து நேரடியாக வடபழனிக்கும் ரயில் போக்குவரத்தை தொடங்க ஆலோசனை நடந்து வருகிறது .இந்த மாத இறுதியில் இந்த போக்குவரத்து தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில் போரூர் முதல் வடபழனி வரை நேரடி போக்குவரத்தையும் பின்னர் ஜூன் மாதம் இடையில் […]

ஷார்ட் வீடியோக்களால் மனநல பாதிப்பா?? புதிய ஆய்வு

சுமார் 100,000 பேரை உள்ளடக்கி நடத்தப்பட்ட ஒரு புதிய பெரிய ஆய்வில், infinite-scroll தளங்களில் அடிக்கடி குறுகிய கால வீடியோக்களை பார்ப்பது, பலவீனமான சிந்தனைத் திறன் மற்றும் மோசமான மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை அதிகம் பயன்படுத்துபவர்களிடம் குறைந்த கவனக்குவிப்பு, குறைவான சுயக்கட்டுப்பாடு மற்றும் பலவீனமான அடிப்படைத் தர்க்க அறிவு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களிடம் அதிகப்படியான பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு காணப்படுகிறது. வேகமான மற்றும் அதிகத் தூண்டுதலைத் தரும் உள்ளடக்கங்களைத் […]

ஜனநாயகம் ரீமேக் படமா?

ஜனநாயகன்’ ரீமேக் என்று பரவி வரும் தகவல்களுக்கு ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிப்புடி விளக்கமளித்துள்ளார். ‘பகவந்த் கேசரி’ தமிழ் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக ‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “’ஜனநாயகன்’ விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். என்றார்

பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு தரிசனம்

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கருமாரி அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் புத்தாண்டை முன்னிட்டு கேசரி வழங்கப்பட்டது.

டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்

ல்லி அருகே ஃபரிதாபாத்தில் லிப்ட் தருவதாகக் கூறி, 28 வயது பெண்ணை வேனில் ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிய கொடூரம். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில் விசாரணை நடத்தி சிசிடிவி மூலம் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதலில் புத்தாண்டை கொண்டாடிய நாடு

‘கிறிஸ்துமஸ் தீவு” எனப்படும் பசிபிக் தீவு நாடான “கிரிபதி”தான் 2026 புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடாக இருக்கிறது. சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட ஒருநாள் முன்னதாகவே புத்தாண்டு பிறக்கிறது.இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு அங்கு நள்ளிரவை எட்டியதால் உலகிலேயே முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத் தேதி

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது

ஜப்பானின் ஸ்மார்ட் கழிப்பறைகள்

ஜப்பானின் புதிய ஸ்மார்ட் கழிப்பறை, உங்கள் கழிவுகளின் வடிவம், நிறம் மற்றும் வேதியியல் மாற்றங்களை ஆய்வு செய்து, முழுமையான ஆரோக்கிய அறிக்கையை நேரடியாக உங்கள் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பி வைக்கின்றன! இதில் உள்ள சிறப்பம்சங்கள்:செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன சென்சார்கள் மூலம் இவை செயல்படுகின்றன. சிறுநீரைப் பரிசோதிக்கும் வசதி இதில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. உங்கள் அன்றாட இயற்கை உபாதைகளை வைத்தே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் கண்டறியலாம். எதிர்கால மருத்துவ உலகம் உங்கள் வீட்டுக் கழிப்பறையிலிருந்தே தொடங்குகிறது! […]

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு. சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு மிகை ஊதியம். ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூ.1,000 பொங்கல் போனஸ். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கும் ரூ.1,000 போனஸ்.