தங்க விலையில் சிறிய உயர்வு

இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல்லில் 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலையால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி நாமக்கல் நகரில் உள்ள பிரபல விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜை;ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்டு அலங்காரம்.

பிட்புல், ராட்வீலர் நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம்

சென்னையில் பிட்புல், ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க நாளை முதல் தடை. மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் – சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம். ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி கண்டறிவது?

தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்களது பெயர் இடம்பெறுமா என்பதை முன்கூட்டியே அதாவது இன்றே அறிந்து கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். மேலும் விவரங்களுக்கு (view details) […]

மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின் மோடிக்கு…

ஓமன் நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘ஓமனின் முதல்தர விருது (The First Class of the Order of Oman – தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன்) வழங்கி மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் கௌரவப்படுத்தினார். இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29 ஆவது வெளிநாடுகளின் உயரிய விருதாகும். மேலும், ராணி எலிசபெத், நெதர்லாந்து ராணி மாக்ஸிமா, நெல்சன் மண்டேலா, பேரரசர் […]

தீய சக்தியை ஒழிக்கவே இயேசு வந்தார்: இபிஎஸ்.

தீயசக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்; தீய சக்தியை ஒழிக்கவே இயேசு வந்தார். சிறுபான்மை மக்களின் காவலன் அதிமுக கிறிஸ்தவர்களை எம்ஜிஆர் மிகவும் நேசித்தார்; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கும் இயக்கம் அதிமுக” – சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

பல்லாவரத்தில் 300 திருச்சபைகளுக்கான கல்லறை நிலத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் வட்டாரத்தைச் சேர்ந்த 300 சபைகளைச் சேர்ந்த போதகர்கள் கலந்து கொண்டனர். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட சபைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஒன்றரை லட்சம் சபை உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கென இருக்கும் சிறு அளவிலான கல்லறைகள் நிரம்பி வழிவதால் குறுகிய காலத்திற்குள் மீண்டும் மீண்டும் ஒரே குழியைத் தோண்டும் அவலநிலை நீடித்து வருகிறது.குடும்பக் […]

தாம்பரத்தில் கிறிஸ்துமஸை முன்னிட்டு இயேசு கிறிஸ்து பிறப்பு முதல் உயிரித்தெழுதல் வரை தத்ரூபமாக நடித்து உலக சமாதானம் அடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில் உள்ள தாம்பரம் கிறிஸ்துவ வியாபாரிகள் சார்பில் கடந்த 30 வருடங்களாக கிறிஸ்மஸ் பெருவிழா இப்பகுதியில் நடைபெற்று வருகிறது அதன்படி இந்த வருடமும் கடந்த இரண்டு நாட்களாக மார்க்கெட் பகுதியில் கிறிஸ்மஸ் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இன்று குரோம்பேட்டை நியூ லைப் ஜெம்ஸ் சபையின் தலைமை போதகர் பாஸ்டர். ஐசக் டேனியல் குழுவினர் கிறிஸ்து பிறப்பு, இறப்பு, உயிர்த்தெழுதல் ஆகியவைகள் குறித்து அனைவரும் கவரும் விதமாகவும், மெய்சிலிர்க்கும் […]

நடிகர் கார்த்தி படம் வெளிவருவதில் சிக்கல்

நடிகர் கார்த்தி நடிக்கும் படம் வாத்தியார் இந்த படம் தயாரிக்க 10 கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள் தற்போது கடன் வட்டியும் சேர்ந்து 20 கோடிக்கு மேலாகிவிட்டது அதை திருப்பி செலுத்தினால் தான் படத்தை வெளியிடுவோம் என்று கூறப்பட்டது ஏனென்றால் படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது

விவசாய சங்க தலைவர் 13 ஆண்டு சிறைக்கு தடை

பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதனை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார் இதைத் தொடர்ந்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது