காங்கிரஸ் மேலிடத்திற்கு பா சிதம்பரம் கண்டிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் பா சிதம்பரம் கூறியதாவது:-தமிழ்நாட்டில் நிச்சயமாக திமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழ்நாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம். மற்ற மாநிலங்களை பற்றி கவலைப்படுங்கள். வீணாக தமிழகத்தில் டெல்லி தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என,நான் காங்கிரஸ் தலைவரிடம் கூறிவிட்டேன் என்றார்.

யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? – விஜய் கேள்வி

சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியம். இளைஞர்களுக்கு எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் யாருக்காக ஆட்சியை நடத்துகிறீர்கள்? இவ்வாறு தவேக தலைவர் விஜய் கேள்விகளை எழுப்பினர்.

தங்கம் விலை மேலும் குறைந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.258-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் சிவன் பார்த்துக் கொள்வார். மத்திய அமைச்சர் பேட்டி

திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழக அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இவ்வாறு அவர் கூறினார்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

1) காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். 2) அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. 3) மெரினா கடற்கரை உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து மூடப்படும். வாகனங்கள் நிறுத்த […]

பான் கார்டு – ஆதார் இணைப்பு இன்றே கடைசி நாள்

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்து உள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க வேண்டும். இணைக்கத் தவறினால் PAN எண் செல்லாது என்று அறிவிக்கப்படும் என வருமான வரித் துறை எச்சரிக்கை.எடுத்துள்ளது.

திமுக கூட்டணியில் மோதல்.வி.சி.க. கம்யூனிஸ்டுமீது காங்கிரஸ் பாய்ச்சல்

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரின் பதிவு வருமாறு:- “VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றிய செய்தி படித்தேன், இதுஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை […]

தமிழக சட்டசபை ஜனவரி 20 இல் கூடுகிறது

சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் […]

விளையாட்டு வீராங்கனை பி.வி சிந்துவுக்கு புதிய பதவி

உலக பாட்​மிண்​டன் சம்​மேளனம் (பிடபிள்​யூஎப்) சார்பில் செயல்​படும் விளை​யாட்டு வீரர்​கள் ஆணை​யத்​தின் தலை​வ​ராக இந்​திய பாட்​மிண்​டன் வீராங்​கனை பி.வி.சிந்து தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்​தப் பதவியை வகிப்​பார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

திருவள்ளூர் மாவட்ட தவெ.க. நிர்வாகி தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பதவி விவகாரத்தில் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.