
உத்தர பிரதேசம் பிலிபித் பகுதியில் உள்ள அனந்த்பூரைச் சேர்ந்தவர் சிவம் குமார். இவரது மனைவி சங்கீதா. கடந்த மாதம் 30-ம் தேதி அன்று சிவம் குமாரிடம் சமோசா வாங்கி வரும்படி சங்கீதா கூறியுள்ளார்.
ஆனால், சிவம் குமார் வெறும் கையுடன் வீடு திரும்பியுள்ளார். சமோசா எங்கே என மனைவி கேட்டபோது, வாங்க மறந்து விட்டேன் என சிவம் குமார் கூறியுள்ளார். இதனால் இருவர் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. மறுநாள் தனது குடும்பத்தினரை வரவழைத்த சங்கீதா, சமோசா விஷயத்தை கூறி, தான் சொல்வதை கணவர் கேட்பதில்லை என புகார் கூறியுள்ளார்.
இது குறித்து சிவம் குமாரிடம் சங்கீதாவின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். இதற்கு சிவம் குமார் கோபத்தில் பதில் அளித்ததால், வாய்த் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. சங்கீதா, அவரது தாய் உஷா, தந்தை ரம்லாடைட், மாமா ராமோதர் ஆகியோர் சிவம் குமார் மீது தாக்குதல் நடத்தினர்.