சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இதுவரை சுமார் 6.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உற்சவ நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாகவே அதிகரித்து வருகிறது. சபரிமலை வழித்தடங்களில் இதுவரை இல்லாத கூட்டம் நேற்று இருந்தது.எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதை, பம்பை, கணபதி கோயில், மரக்கூட்டம், அப்பாச்சிமேடு, பெரிய நடைப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் […]
அமெரிக்காவுக்கு 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை வழங்கியது வெனிசுவேலா
வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள் அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி மாணவியிடம் செயின் பறிப்பு
சென்னை தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகிறார். இவர் நேற்று மதியம் வகுப்பு முடிந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். இந்து மிஷன் மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, லுங்கி மற்றும் சட்டை அணிந்துகொண்டு சாதாரணமாக வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென பாய்ந்து வந்து, மாணவி அணிந்திருந்த 7 பவுன் தாலி […]
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டாலும் தொடரும் பிரச்சினைகள்
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை ஜனவரி 7-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சுரங்கப்பாதையை திறந்து வைக்கிறார். ராதா நகர் சுரங்கப்பாதை 17 ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் நீடிக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், என்று குடியிருப்போர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் ரயில் நிலையத்திற்கு கிழக்கே 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ராதா நகர் ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். […]
பொங்கலுக்கு 22,797 சிறப்பு பஸ்கள் பேருந்துகளை இயக்க முடிவு
பொங்கலை ஒட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக 22 797 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .வரும் ஒன்பதாம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த பஸ்ஸில் இயக்கப்படும். இதற்காக கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பகுதிகளில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பொங்கலுக்கு தென் மாவட்டங்களுக்கு ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய மகாபலிபுரம் சாலை, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளி சுற்றுச்சாலையை தேர்வு செய்து பயன்படுத்துமாறு அமைச்சர் […]
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் திமுக ஆட்சிக்கு பின்னடைவு
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது சரியானது. அறநிலைத்துறை கோவில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் அந்த தீபத்தூண் கோவில் எல்லைக்குள் தான் உள்ளது என்று அதிரடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு அரசே காரணம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது என நீதிபதிகள் […]
பட்டியல் இன தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு – எடப்பாடி வாக்குறுதி
தமிழகத்தில் வீடு இல்லாதவருக்கு வீடு கட்டி கொடுக்க பசுமை வீடுகள் திட்டம் கலைஞர் கனவு இல்லம் திட்டம் ,பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் ஆகிய வீடுகள் உள்ளன.இந்த நிலையில் எடப்பாடி பேசுகையில் “திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்லும் பட்டியலின தம்பதிகளுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்” என்று கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
நாளை மாற்றப்பட இருந்த பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் தள்ளிவைப்பு
“பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள பதிவில், நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.பிராட்வே பஸ் நிலையம் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் கவர்னரிடம் எடப்பாடி பரபரப்பு புகார்
திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், என்றும் தமிழக கவர்னரிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் கவர்னரை சந்தித்து ஊழல் பட்டியலை கொடுத்து, ஒவ்வொரு துறைகளும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தனது மனுவில் அவர் கூறியிருக்கிறார்.
கரூர் சம்பவம் – விஜய்க்கு சிபிஐ சம்மன்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் நெரிசலின் சிக்கி 41 பேர் பலியானார்கள் இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.ஏற்கனவே டெல்லியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. தற்போது இந்த வழக்கில் நடிகர் விஜய் விசாரிக்கப்படுகிறார். இதற்காக அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது