சென்னையின் “கடும் குளிர்”

சென்னையில் நிலவும் “கடும் குளிர்” குறித்து பலரும் கேட்கிறார்கள். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று பகல் நேர வெப்பநிலை இயல்பை விட மிகக் குறைவாக இருந்தது. இது நாளை மற்றும் நாளை மறுநாளும் நீடிக்கலாம் (இருப்பினும் வெப்பம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது). பொங்கல் பண்டிகை முதல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கும். இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு நேரங்களில் குளிர் நிலவும். மதிய நேரங்களில் மீண்டும் வெப்பம் அதிகரித்து, சென்னையின் […]

ஸ்டார்லிங்க் சேவையை முடக்கியது ஈரான் அரசு.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில்,அங்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது தொலைதூர வசதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று சிறிது நேரம் இந்த வசதி அனுமதிக்கப்பட்டபோது அமெரிக்க தொழிலதிபர் எல்லாம் நடத்தும் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை உடனடியாக தொடங்கப்பட்டது.ஆனால் ராணுவ ஜாமர்களைக் கொண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரான் முடக்கியது நாடு முழுவதும் சில நாட்களுக்கு முன்பு இணைய சேவையை முடக்கிய அரசு முதல் முறையாக, சாட்டிலைட் இணைய சேவையும் முடக்கியது.. எங்களது இணைய சேவையை எந்த […]

கூட்டணிக்கு வரும் புதிய கட்சி -எடப்பாடி தகவல்

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, அன்புமணி பா.ம.க ஆகியோர் இணைந்துள்ளனர் தற்போது மேலூம் ஒரு கட்சி ஓரிருநாளில் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார்

ஆட்சியில் பங்கு ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கேட்டு வருகிறது ஆனால் அவ்வாறு பங்கு தர முடியாது என்று அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார் இதனை ஸ்டாலின் சொன்னதாக அவர் கூறினார் இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ராகுல் காந்தி தமிழககாங்கிரசாரை டெல்லிக்கு அழைத்துள்ளார்

ராமதாசுடன் திமுக பேச்சுவார்த்தை

திமுக கூட்டணியில் சேர்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் பேச்சாற்றை நடத்தி வருகிறார் இதே போல ஜான்பாண்டியனும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார் விரைவில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் கூறினார்

விஜயிடம் சிபிஐ விசாரணை

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை. நடத்துகிறது இந்த விசாரணைக்கு வரும் படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது . இதற்காக அவர் தனி விமானத்தில் டெல்லி சென்றார். இன்றும் நாளையும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதால் விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வைகோ பாத யாத்திரை இன்று நிறைவு

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை மதுரையில் இன்று நிறைவு செய்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓபுளா படித்துறை பகுதியில் நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்

எடப்பாடி டெல்லி பயணம்

பாமக உடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். நாளை அவர் பாஜக தலைவர்கள் சந்தித்து பேசுகிறார் அப்போது தொகுதி பங்கீடு முடிவாகும் என்று தெரிகிறது.

தங்கம் சவரனுக்கு ரூ.320, வெள்ளி ரூ.12,000 உயர்வு

தங்கம்ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரும்.