பிரபல மலையாள நடிகர் மரணம்

மலையாள திரையுலகில் நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி குரல் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் திறனுக்காக அறியப்படும் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 69. உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். டயாலிசிஸ் சிகிச்சைக்காக சென்ற போது அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பூணித்துறை தாலுகா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை 8.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார்

ரூ.3 கோடி பணத்துக்காக பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்ற மகன்கள் கைது

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.அக்டோபர் மாதம் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் […]

புறாக்களுக்கு உணவளிக்க தடை.

கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு! பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், சுகாதார சீர்கேடு அச்சுறுத்தல் காரணமாகவும் தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறினால் தொற்று நோய்களை பரப்புதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை.

லிவ் இன் உறவுகள் குற்றமில்லை – அலகாபாத் உயர் நீதிமன்றம்.

“Adult வயதை எட்டிய இருவர், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, அவர்களின் தனியுரிமை. சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக குற்றமாகக் கருத முடியாது” லிவ்இன் உறவு முறை சட்ட விரோதமானது இல்லை எனக்கூறி குடும்பத்தினரால் மிரட்டலுக்கு உள்ளாகும் 12 ஜோடிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு.

சூர்யகுமார் யாதவ் கேப்டன்; அக்‌ஷர் படேல் துணை கேப்டன். இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்தனர்; சுப்மன் கில்லுக்கு இடமில்லை. பிப்ரவரி 7ஆம் தேதி போட்டிகள் தொடக்கம்.

வானிலை முன்னெச்சரிக்கை.குளிர் நீடிக்கும்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவான வெப்பநிலையே நீடிக்கும். வட தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் இரவு நேரக் குளிர் அதிகமாக இருக்கும். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 13°C முதல் 14°C வரை குறைய வாய்ப்புள்ளது. சென்னை நிலவரம்: இன்றும் நாளையும் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் நகரின் சில இடங்களில் இரவு நேர வெப்பநிலை 20°C-க்குக் கீழ் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடி ஹெலிகாப்டர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள தாஹேர்பூர் ஹெலிபேடில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் இன்று (டிச.20) அப்பகுதியில் நிலவிய அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட காட்சித் தெளிவின்மை காரணமாக தரையிறங்க முடியாமல் கொல்கத்தாவுக்கு திரும்பியது. இன்று காலையில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தாஹேர்பூர் ஹெலிபேட் தளத்தின் மீது சிறிது நேரம் வட்டமிட்ட பிறகு, யூ-டர்ன் அடித்து கொல்கத்தா விமான நிலையத்துக்கே திரும்பியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

களத்தில் இருப்பது யார்?விஜய்க்கு சீமான் பதில்

ஈரோட்டில் பேசிய நடிகர் விஜய் திமுக மட்டுமே தங்களுக்கு எதிரி மத்தவங்களை எல்லாம் களத்தில் இல்லை அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்று கூறினார் எது குறித்து சீமானிடம் கேட்டபோது நானும் களத்தில் இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார்

இம்ரான் கானுக்கு 17 ஆண்டு சிறை

சவுதி அரேபியா மன்னரிடம் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது இம்ரான் கானும் அவரை மனைவியும் முறைகேடாக தங்கம் வாங்கி உள்ளனர் இது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .இம்ரான் கான் ஏற்கனவே சிறைவாசத்தில் தான் உள்ளார்

சபரிமலை தங்கம் திருட்டு சென்னை தொழில் அதிபர் கைது

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் இதுவரை 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கு விசா​ரணை​யின்​போது சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்​னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி பங்​கஜ் பண்​டாரி நேற்று கைது செய்​யப்​பட்டார். துவார பால​கர் சிலைகளில் இருந்து திருடப்​பட்ட தங்​கத்தை கர்​நாட​கா​வின் பெல்​லாரியை சேர்ந்த ஜூவல்​லரி உரிமை​யாளர் கோவர்​தன் வாங்​கிய​தாக குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது. அவரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இருவரையும் அதிகாாிகள் […]