ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்.
கடலூர்:- சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, வாத்திய கருவிகள் இசைக்க கொடியேற்றப்பட்டது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். வருகிற ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.
கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
டெல்லி:டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிப்பதுடன் நம்பிக்கை, அமைதி, மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள […]
பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொலைதூரப் பகுதிக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும். இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
நீருக்கடியில் கிறிஸ்மஸ் குடில் – கடல் கன்னியுடன் சாந்தா குரூஸ் நீச்சல்
விஜிபி மரைன் கிங்டம் காட்சியகத்தில் நீருக்கடியில் கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து உச்சத்தை தொடும் தங்கம்
இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தினசரி 110 கிலோமீட்டர் பள்ளிக்கு சைக்கிளில் வரும் ஆசிரியர்
மதுரையைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர், மானாமதுரையில் உள்ள பள்ளிக்கு 110 கி.மீ. சைக்கிளில் வந்து செல்கிறார். மதுரை கூடல்நகரைச் சேர்ந்தவர் ராபின் சுந்தர்சிங் (47). இவர் மானாமதுரையில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 2005-ம் ஆண்டு முதல் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் மதுரையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு ஒருநாள் இடைவெளி யில் சைக்கிளில் வந்து செல் கிறார். இதற்காக காலை 5.30 மணிக்கே வீட்டிலிருந்து புறப்படும் அவர், காலை 8.30 […]
திருமாவளவன் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’நடிகை கஸ்தூரி
`தீபம் ஏற்றிவிட்டால் எய்ம்ஸ் வருமா, சோறு கிடைக்குமா என கேட்கிறாரே திருமாவளவன், சந்தனக்கூடு நடப்பதால் சோறு கிடைக்குமா என கேட்பாரா? அவர் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி
கூட்டணி வதந்தியை மறுத்த ஓபிஎஸ், டிடிவி
மத்திய மந்திரி பியூஸ் கோயில் நேற்று எடப்பாடி சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார் அப்போது ஓபிஎஸ் டிடிவி தினகரன் கட்சிகளுக்கு அணிகளுக்கு எத்தனை இடங்கள் என்ற செய்திகள் வெளியாகின தற்போது அவர்கள் இரண்டு பேருமே இதனை மறுத்துள்ளனர் எடப்பாடி உடன் அணி சேர மாட்டேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார் டிடிவி தினகரன் கல்யாணமே ஆகவில்லை அதற்குள் பிள்ளைக்கு பெயர் வைக்கலாமா என்று கேட்டுள்ளார்
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது எல்விஎம்-3 எம்6 ராக்கெட்
அமெரிக்க செயற்கைக்கோளுடன் பறந்த இஸ்ரோ ராக்கெட் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) இருந்து அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் இன்று(டிச.24) காலை 8.54 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது அதனைத்தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில், புவியின் தாழ் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
விஜய்க்கு எதிராக பேசக்கூடாது!
திமுகவுக்கான சிறுபான்மை வாக்குகளை சரிசமமாக பிரிப்பதில் விஜய் முக்கிய பங்கு வகிப்பார். விஜய் பாஜக கூட்டணிக்கு வர வேண்டிய தேவை இல்லை என்றாலும், கட்சி பொதுக்கூட்டங்களிலோ, சமூக வலைதளங்களிலோ அவருக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிப்பதை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்” – தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்!