ஈரோடும் மஞ்சளும் – விஜய் விளக்கம்

ஈரோடு கூட்டத்தில் விஜய் பேசும்போது மஞ்சள்… பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்கனும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவசாயத்திற்கு பெயர்போன மண்.. எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க… நீங்க என்ன […]

125 நாள் வேலை திட்டம் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்துவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!

திமுக தீய சக்தி , த.வெ.க தூய சக்தி -விஜய் பேச்சு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது-24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா… தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி” இவ்வாறு […]

திருச்செந்தூர் கடலில் குளிக்க கட்டுப்பாடு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடற்கரையில் பக்தர்கள் குளிப்பது வழக்கம். தற்போது அந்த கடற்கரை பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாறைகள் வெளியே தெரிகின்றன. எனவே பக்தர்கள் நீண்ட நேரம் குளிக்க கூடாது. வயதானவர்கள் தனியாக குளிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு கட்டை கட்டி வைத்துள்ளனர்

எம்ஜிஆர் வடிவத்தில் விஜய் – செங்கோட்டையன் பேச்சு

ஈரோட்டில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரம்மாண்ட கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசும்போது எம்ஜிஆர் வடிவத்தில் விஜயை பார்க்கிறேன் என்று தெரிவித்தார்

எலான் மஸ்க் சொத்து மதிப்பு 58 லட்சம் கோடி

அமெரிக்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பல்வேறு தொழில்களில் முன்னணியில் இருக்கிறார் குறிப்பாக விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்க அரசுக்கு இணையாக தனியாக நிறுவனம் நடத்துகிறார் அவரது சொத்து மதிப்பு 58 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டது உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்

திருப்பரங்குன்றம் தீபத்தூண்- அரசு உறுதி

திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று வாதாடும்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை 1920 இல் நடந்த ஆய்விலும் இந்த தூண் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளது

கிராம வேலை வாய்ப்பு திட்ட புதிய மசோதா நிறைவேற்றம்

கிராம மக்களுக்காக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தனர் இதற்கு மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டு இருந்தது. தற்போது 125 நாள் வேலை நாளாக மாற்றி மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.இதில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .அப்போது கடும் அமளி ஏற்பட்டது

ஈரோடு கூட்டம் விஜய் வெளியீட்ட வீடியோ

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் கூட்டம் முடிந்த போது அவர் செல்பி வீடியோ எடுத்தார் அதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது

சிட்லபாக்கம் பெருமாள் கோவிலில் குடமுழக்கு விழா

சென்னை அடுத்த சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது சிட்லப்பாக்கம் ஜோதிநகரில் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் கோவில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாஹீதி நடைபெற்று புனித கலசநீரை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரகலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது, […]