“பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள பதிவில், நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.பிராட்வே பஸ் நிலையம் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.