சென்னை எண்ணூர் கடற்கரையில், கல்லூரி மாணவி உட்பட 4 பெண்களின் உடல்கள் ஒரே நேரத்தில், கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

4 உடல்களையும் மீட்ட போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

போலீஸாரின் முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஷாலினி (வயது -18) என்பவர் தனியார் கல்லூரி மாணவி

தேவகி பவானி காயத்ரி ஆகிய 3பேரும் ஜவுளிக்கடையில் பணியாற்றுபவர்கள்

ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதியில் 4-பேரும் சென்றதால் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்

கற்கள் அதிகம் உள்ளதால் இறந்தவர்களின் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிய வந்து உள்ளது