
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4-ல் வெற்றி பெற்ற நிலையில், தற்போது வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதால், இம்முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டுப் பெற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 50 தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பாஜக கேட்டுப் பெற விரும்புகிறது. ஆனால், கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் 20 முதல் 25 தொகுதிகளை மட்டும் வழங்க அதிமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 40 தொகுதிகளை கொடுத்து, அதிலிருந்து 20 தொகுதிகளை தேர்ந்தெடுக்குமாறு பாஜகவை அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.